வியாழன், 3 ஜூன், 2010

மரணிக்கும்போது


உனக்காகவே நானென்றுஎன்னை நீ உச்சிமுகர்ந்தாய் அத்தருணமே என்மனம் சாந்தி அடையக்கண்டேன்நான் பிறக்க நீ வரம்கேட்டாய் என்னை மணக்க வரம்கேட்டாய் நமதன்பின் வெளிப்பாடாய் நம்வாரிசுகளின் வரம்கேட்டாய்எத்தடையுமின்றி எல்லாமே கிடைத்தனஎன்னவனே!எனக்கு வரமாக கிடைத்தவனே!எனக்காக ஒருவரம் இறைவனிடம்கேட்பாயா?என்விழிநீர் உன்னைத்தழுவ உன் மார்புக்குழிக்குள் நான்முகம் புதைத்திருக்கும் வேளையில்எனக்கான மரணம் நிகழவேண்டுமென்று...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.