புதன், 28 ஜூலை, 2010
யாரறிவார் இவள் மனதை?
வரம் ஒன்று தந்தான்
இறைவன் இலவசமாக
அழுகையும் கண்ணீரையும்
கனவுகள் பிரதிபலிக்க வேண்டிய
காலத்தில் - வாழ்க்கையெனும் பயணமே
கனவாகியது எனக்கு....
வேதனை என்ற சொல்லுக்கு
வரை விலக்கணம் தனைக் கூறியது
கன்னங்களின் ஓரம்
காய்ந்துபோன கண்ணீர்த்துளி..
எனைவிட்டு புன்னகையும் பொன்னகையும் தொலை தூரம் தொலைந்து போனதால்
பொன்னகையில் பார்ப்பதை விட
புன்னகையில் பார்ப்பது என்னை
பகல் நேர பௌர்ணமிகளாய்
தோன்றியது சிலருக்கு ....
எனை நோக்கி அனுதாபம்
அடைந்த சில நட்புகளை
மறக்கவில்லை இன்னும் என் மனம் - ஆனால்
காயம் கண்ட இதயமதை மீண்டும்
காயப்படுத்திய உறவுகளை இன்னும்
ஏற்கவில்லை என் மனம் ஏனோ?
காலங்களும் கரைந்து சென்றது
காட்சிகளும் மாறியது
கனவுகள் போல
கண்கள் கண்ட கனவுகளும்
கலைந்து சென்றது
கார்மேகம் போல...
மனதில் எழுந்த கேள்விகளுக்கு
விடை தேடுகின்றேன்
நான் நாளும்..
மனித மனங்களும் மரித்து விட்டது
இறைவனோ மௌனம் காக்கின்றான்
கண்ணீரைப் பரிசாக தந்து விட்டு....
பேதை இவள் பேதலிக்கின்றாள்
வரும் கால வாழ்வை எண்ணி
யாரறிவார் இவள் மனதை......
திங்கள், 26 ஜூலை, 2010
மனைவியை மகிழ்விப்பது எப்படி?
குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் ஆணும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை)
அழகிய வரவேற்பு
வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.
மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட.அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி 'முஸாபஹா' செய்யலாம்.
வெளியில் சந்தித்த நல்ல செய்திகளைத் தெரிவித்துவிட்டு மற்ற செய்திகளை வேறு சந்தர்ப்பத்திற்காகத் தள்ளி வையுங்கள்.
இனிப்பான சொல்லும் பூரிப்பான கனிவும்
நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.
உங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள்.
தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.
மனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழைக்கலாம்.
நட்பும் இனிய நிகழ்வுகளை மீட்டுதலும்
மனைவிக்காக நேரத்தை ஒதுக்குங்கள்.
நல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நீங்களிருவரும் ஆனந்தமாகக் கழித்த அனுபவங்களை இருவரும் தனித்து இருக்கும்பொழுது மீட்டிப் பாருங்களேன்.
விளையாட்டும் கவன ஈர்ப்பும்
நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.
ஒருவருக்கொருவர் போட்டி போட்டு, பந்தயங்களில் ஈடுபடுங்கள். அது விளையாட்டாகவோ, குர்ஆன், நபிமொழி, பொதுஅறிவு போன்ற கல்விகளைக் கற்பதிலோ அல்லது வேலை செய்வதிலோ இருக்கலாம்.
இஸ்லாம் அனுமதித்த விஷயங்களை (விளையாட்டுப் போட்டிகள் போன்றவை...) பார்ப்பதற்கு வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.
இஸ்லாம் அனுமதிக்காத 'பொழுது போக்கு" விஷயங்களில் (சினிமா, ஸீரியல்கள் போன்றவற்றில்) உள்ள தீங்குகளை எடுத்துச் சொல்லி அவற்றை மறக்கடியுங்கள்.
வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவ
வீட்டு வேலைகளில் எதிலெல்லாம் மனைவிக்குத் துணைபுரிய முடியுமோ அதிலெல்லாம் உதவுங்கள். மிக முக்கியமாக அவள் நோயுற்றோ களைப்படைந்தோ இருந்தால்.
கடினமான வீட்டு வேலைகளில் மனைவி ஈடுபடும்பொழுது நன்றி தெரிவித்து அவளை உற்சாகப் படுத்துங்கள்.
இனியவளின் ஆலோசனை
குடும்ப விஷயங்களில் உங்கள் மனைவியுடன் கூடிஆலோசனை செய்யுங்கள்.
அவளிடம் ஆலோசனை செய்யப்பட வேண்டும் என அவள் எதிர்பார்க்கும் சிறப்புத் தருணங்களில் அவளின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள் (பிள்ளைகளின் திருமண விஷயங்கள் போன்றவை)
மனைவியின் கருத்துக்களை துச்சமாக நினைக்காமல் கவனமாகப் பரிசோதியுங்கள்.
மனைவின் கருத்து சிறந்ததாக இருந்தால் (உங்கள் கருத்தை புறந்தள்ளிவிட்டு) அவளின் கருத்தைத் தேர்ந்தெடுக்க தயக்கம் காட்டாதீர்கள்.
ஆலோசனை தந்து உதவியதற்காக அவளுக்கு நன்றி கூறலாம்.
பிறரைக் காணச் செல்லும்பொழுது
மார்க்கத்தில்/பழக்கத்தில் உயர்ந்த பெண்களுடன் தோழமை வைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். மேலும் உறவினர்களைப் பார்க்கச் செல்வதால் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துங்கள் (பார்க்கச் சென்றவர்களிடம் வீணான பேச்சுக்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்கினால் கண்டியுங்கள்).
அங்கு இஸ்லாமிய ஒழுக்கங்கள் பேணப்படுகின்றனவா என கவனித்துக் கொள்ளுங்கள்.
அவளுக்கு சங்கடம் தரக்கூடிய இடங்களுக்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்துவது நல்லதல்ல.
உங்களின் வெளியூர் பயணத்தின்பொழுது
மனைவிக்குத் தேவையான நல்ல அறிவுரைகளைக் கூறிவிட்டு அழகான முறையில் விடைபெறுங்கள்.
உங்களுக்காக இறைவனிடம் துஆ செய்யச் சொல்லுங்கள்.
நீங்கள் வீட்டில் இல்லாதபொழுது இரத்தபந்த உறவினர்களிடம் அவளுக்குத் தேவையான அவசியமான உதவிகளைச் செய்து தரும்படி கேட்டுக்கொள்ளலாம்.
குடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்துச் செல்லுங்கள்.
நீங்கள் வெளியூரில் இருக்கும் நாட்களில் டெலிபோன், கடிதம், ஈமெயில் போன்றவற்றின் மூலமாக மனைவியுடன் தொடர்பு கொள்ளுங்கள் (பிரிவின்பொழுதுதான் இருவருக்குமே ஒவ்வொருவரின் அருமையும் முழுமையாகப் புரியும். அப்பொழுது இவற்றின் மூலமாக நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வு, உங்களின் பரஸ்பர அன்பை வளர்க்கும்).
முடிந்தவரை சீக்கிரம் ஊர் திரும்ப முயற்சி செய்யுங்கள்.
திரும்பி வரும்பொழுது அவளுக்கு விருப்பமான பரிசுப் பொருள்களை வாங்கி வரலாம்.
எதிர்பாராத நேரத்திலோ இரவு நேரத்திலோ வீடு திரும்புவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் (உங்களுக்காக அலங்கரித்துக் கொள்ளாமல் இருப்பது அவளுக்கு சங்டத்தை ஏற்படுத்தும்).
பிரச்சினைகள் எதுவும் வராது என எண்ணினால் மனைவியையும் உடன் அழைத்துச் செல்லலாம்.
பொருளாதார உதவி
கணவன் என்பவன் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்பவனாக இருத்தல் வேண்டும்; மாறாக, கஞ்சத்தனம் செய்யக் கூடாது. (வீண் விரயமும் செய்யக் கூடாது).
அவளுக்கு ஊட்டிவிடும் உணவு முதல் அவளுக்காகச் செய்யும் அவசியச் செலவுகள்வரை அனைத்திற்கும் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
அவசியத் தேவைக்கான பணத்தை உங்களிடம் கேட்பதற்கு முன்னரே கொடுப்பதுதான் சிறந்தது.
அழகும் நறுமணமும்
நபிவழியின்படி அக்குள்முடி மற்றும் மறைவான பகுதியில் உள்ள முடிகளை நீக்கிவிடுவது.
எப்பொழுதும் நேர்த்தியாக அழகுபடுத்திக் கொண்டு சுத்தமாக இருப்பது.
அவளுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளுங்கள்.
தாம்பத்யம்
மனைவிக்கு தாம்பத்ய சுகம் கொடுக்க வேண்டியது கணவனின் கடமை என்பதை நினைவில் வையுங்கள் (இருவரில் ஒருவரின் உடல்நலக்குறைவு காரணமாகத் தள்ளிப் போட்டுக் கொள்ளலாம்).
பிஸ்மில்லாஹ் (இறைவனின் திருநாமத்தால்) என்று சொல்லி ஆதாரப்பூர்வமான பிரார்த்தனையைச் (ஷைத்தானின் தீங்கைவிட்டு இறைவனிடம் பிரார்த்தனை) செய்தவாறு ஆரம்பியுங்கள்.
இறைவன் படைத்திருக்கும் இன உறுப்பைத் தவிர்த்து வேறு வகைகளில் இல்லறச் சுகம் அனுபவிக்கக் கூடாது (மலப்பாதையின் வழியாக ஈடுபடுவது ஹராம்).
காதல் வார்த்தைகளுடன் முன்விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள்.
அவளை திருப்திப்படுத்தும் வரை தொடருங்கள்.
அமைதிக்குப் பிறகு நகைச்சுவையால் அவ்விடத்தைக் கலகலப்பாக்குங்கள்.
மாதவிடாய்க் காலத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடுவது ஹராம் (தடுக்கப்பட்டது).
பெண் என்பவள் அதிகம் வெட்கப்படுபவள். எனவே அவளின் கூச்சத்தை நீக்குவதில் எல்லை கடந்துவிடாதீர்கள்.
மனைவிக்கு விருப்பமற்ற, கஷ்டமான கோணங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.
அவளின் நோய் மற்றும் களைப்படைந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுங்கள்.
இரகசியங்களைப் பாதுகாத்தல்
படுக்கையறை விஷயங்கள் மற்றும் அவளின் சொந்தப் பிரச்சினைகள் போன்றவற்றை பிறரிடம் எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்தாதீர்கள்.
இறைவனுக்கு கட்டுப்படும் விஷயங்களில் உதவியாக இருப்பது
தஹஜ்ஜத் (இரவு) தொழுகைக்காக இரவின் கடைசிப்பகுதியில் எழுப்புங்கள்.
உங்களுக்குத் தெரிந்த திருக்குர்ஆன் அறிவை அவளுக்கும் போதியுங்கள்.
காலை-மாலை நேரங்களில் ஓதக்கூடிய திக்ரு (இறைநினைவுகளை - நபியவர்கள் காட்டித் தந்தவைகளை மட்டும்) அவளுக்கு போதியுங்கள்.
இறைவனின் பாதையில் செலவு செய்வதற்கு ஆர்வமூட்டுங்கள்.
ஹஜ்/உம்ராவிற்கு (பணம் மற்றும் உடல்) சக்தி பெற்றிருந்தால் அழைத்துச் செல்லுங்கள்.
மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மரியாதை செய்யுங்கள்.
அவளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களைப் பார்க்க அழைத்துச் செல்லுங்கள்.
உங்களின் வீட்டுக்குவர அவர்களுக்கு அழைப்புக் கொடுங்கள். அப்படி வரும்பொழுது அன்புடன் வரவேற்று உபசரியுங்கள்.
அவசியமான தருணங்களில் அவர்களுக்கு ஒத்தாசையாக இருங்கள்.
பொருளாதாரம் மற்றும் உங்களின் சக்திக்குட்பட்ட உதவிகளைச் செய்யுங்கள்.
உங்களுக்கு முன் மனைவி மரணித்துவிட்டால் நபியவர்களின் வழிமுறையைப் பேணி மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மனைவி (உயிருடன் இருக்கும்பொழுது) உதவி செய்ததுபோல் செய்து அன்பு பாராட்டுங்கள்.
இஸ்லாமியப் பயிற்சி
கீழே கொடுக்கப்பட்டவைகளை அறிந்து கொள்வதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது :
இஸ்லாத்தின் அடிப்படை
அவளின் பணிகள் மற்றும் உரிமைகள்
படித்தல் மற்றும் எழுதுதல்
இஸ்லாமியப் பாடங்களை மற்றும் அதன் நுணுக்கங்களை படிப்பதற்காக ஆர்வமூட்டுவது
பெண்கள் சம்பந்தமான இஸ்லாமிய சட்டங்கள்
வீட்டின் இஸ்லாமிய நூலகத்திற்காக புத்தகங்கள் மற்றும் கேஸட்டுகள் வாங்குவது.
மேன்மையான அக்கறை
வெளியில் போகும்பொழுது இஸ்லாமிய முறைப்படி பர்தா அணிந்திருக்கின்றாளா எனக் கவனித்துக் கொள்வது.
மஹரம் அல்லாத ஆண்களின் மத்தியில் கலந்திருப்பதைக் கண்டிப்பது. (அவளின் சிறிய மற்றும் பெரிய தந்தை மகன்களாக இருந்தாலும் சின்னம்மா பெரியம்மா மகன்களாக இருந்தாலும் உங்களின் தம்பியாக இருந்தாலும் தவறுதான்).
அதிகப்படியாகத் துருவி ஆராய்தலைத் தவிர்ந்து கொள்வது
உதாரணமாக, அவளின் ஒவ்வொரு பேச்சிலும் குற்றங்குறைகளை ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள். மனப்பூர்வமாக இல்லாமல் வாய் தவறிக்கூட பிழையாகப் பேசியிருக்கலாம்.
அவசர விஷயத்திற்காக அண்மையில் உள்ள இடங்களுக்குப் போவதைத் தடுக்காதீர்கள். (ஆனால் ஹிஜாப் பேணப்பட வேண்டும்)
தொலைப்பேசிக்கு (நீங்கள் அருகில் இல்லையென்றால்) பதில் அளிப்பதைக் கண்டிக்காதீர்கள். (குழைந்து பேசக்கூடாது என்று எச்சரிக்கை செய்யுங்கள்)
பொறுமையும் சாந்தமும்
மணவாழ்வில் கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபங்கள் வருவது சாதாரண விஷயம்தான் (வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதுபோல ஒவ்வொரு வீட்டிலும் இவை ஒவ்வொரு உருவத்தில் உலாவருகின்றன). அதிகப்படியான பொறுப்புகளில் உட்படுத்துவதும் சிறிய விஷயங்களைப் பெரிதாக்குவதும் போன்றவைதாம் திருமண பந்தத்தை முறித்துவிடும் அளவுக்குச் சென்று விடுகிறது.
இறைவன் விதித்த வரம்புகளை மீறும்போது கோபம் காட்டப்பட வேண்டும். உதாரணமாக தொழுகையைத் தாமதப்படுத்துதல், புறம் பேசுதல், தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்களை டி.வியில் பார்த்தல் இது போன்றவை.
உங்களின் விஷயங்களில் செய்த தவறுகளை பெருந்தன்மையுடன் மன்னித்துவிடுங்கள்.
தவறுகளைத் திருத்துதல்
முதலில் (முழுமனதோடு) நல்லுபதேசம் செய்யுங்கள்.
அதிலும் திருந்தாவிட்டால், தாம்பத்யத்தில் ஈடுபடாது கட்டிலில் திரும்பிப் படுத்துக் கொள்ளுங்கள். (உங்களின் கோப உணர்வை இவ்வாறு வெளிப்படுத்துவது) அதற்காக, படுக்கையறையை விட்டு வெளியேறுவதோ, வீட்டைவிட்டு வெளியில் சென்றுவிடுவதோ அல்லது அவளிடம் பேசாமல் இருப்பதோ அல்ல.
அதிலும் திருந்தாவிட்டால், கடைசி முயற்சியாக காயம் ஏற்படாமல் இலேசாக அடிக்கலாம் (அதற்கு அவள் தகுதியானவளாக இருந்தால் மட்டும்).
மனைவியை அடிப்பது நபிவழியில் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் என்றும் நபியவர்கள் மனைவியை அடிப்பவர்களாக இருக்கவில்லை என்பதையும் ஒவ்வொரு கணவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
மனைவி (எந்தக் காரணமும் இன்றி தாம்பத்தியத்திற்கு மறுத்தல், தொடர்ந்து தொழுகையை அதன் நேரத்தில் தொழாமல் இருத்தல், கணவனின் அனுமதியின்றி வீட்டைவிட்டு அதிக நேரத்திற்கு வெளியில் செல்லுதல் அல்லது எங்கே சென்றிருந்தாள் என்பதைக் கணவனுக்குச் சொல்ல மறுத்தல் இது போன்ற விஷயங்களில்) கட்டுப்பட மறுத்தால் கணவர் இந்த அனுமதியைப் பயன்படுத்தலாம்.
குர்ஆனில் (4வது அத்தியாயம் 34-ம் வசனத்தில்) கூறப்பட்டதுபோல் அவளுக்கு நல்லுபதேசம் செய்து படுக்கையிலிருந்து விலக்கி அதில் திருந்தாவிட்டால்தான் அடிக்கும் அனுமதியை கணவர் பயன்படுத்தலாம்.
காயம் உண்டாகும்படியோ முகத்திலோ மற்றும் மென்மையான பகுதியிலோ அடிக்கக் கூடாது.
செருப்பினால் அடிப்பது போன்ற மானபங்கப்படுத்தும் செயல்களில் ஒருக்காலும் ஈடுபடக் கூடாது.
மன்னிப்பும் கண்டிப்பும்
பெரிய தவறுகளை மட்டும் கணக்கில் எடுங்கள்.
உங்களின் விஷயத்தில் தவறு செய்தால் மன்னித்துவிடுங்கள். இறைவனின் விஷயங்களில் தவறு செய்தால் கண்டிக்கத் தவறாதீர்கள்.
தவறு செய்யக்கூடிய நேரங்களில் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய மற்றும் அவளின் நற்பண்புகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் (உங்களின் கோபம் குறையலாம்).
எல்லா மனிதர்களும் தவறு செய்யக்கூடியவர்கள்தாம். எனவே மன்னிக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். (மனச்சோர்வு, களைப்பு, மாதவிடாய் போன்றவற்றின் மன-உடல் உளைச்சல்களினால் தவறுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு).
சமையல் சரியில்லை என்ற காரணத்திற்காக மனைவியைக் கடிந்து கொள்ளாதீர்கள். நபியவர்கள் சமையல் விஷயத்திற்காக மனைவியைக் கண்டித்ததே இல்லை. பிடித்தால் சாப்பிடுவார்கள், பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாமல் இருந்துவிடுவார்கள்; தவிர எந்த விமர்சனமும் செய்ய மாட்டார்கள்.
தவறுகளை நேரிடையாக அவளிடம் வெளிப்படுத்துவதற்குமுன் வேறுவழியில் நயமாகச் சுட்டிக்காட்டுங்கள். ஏனென்றால் சில நேரத்தில் இது பயனுள்ளதாக இருக்கும்.
அவமரியாதை செய்யக்கூடிய வகையில் மனைவியைத் திட்டுவதைத் தவிர்ந்துக் கொள்ளுங்கள்.
பிரச்சினை பேசி தீர்த்துக் கொள்ளக்கூடியதாக இருந்தால், தனிமை கிடைக்கும்வரை பொருத்திருங்கள்.
மனைவிமீது கோபம் ஏற்பட்டால், உங்களை சரியான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவற்காக கோபம் குறையும்வரை சற்றுப் பொறுமை கொள்ளுங்கள்.
உங்கள் இல்லறம் இனிமையாகத் தொடர நல்வாழ்த்துகள்!
அழகிய வரவேற்பு
வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.
மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட.அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி 'முஸாபஹா' செய்யலாம்.
வெளியில் சந்தித்த நல்ல செய்திகளைத் தெரிவித்துவிட்டு மற்ற செய்திகளை வேறு சந்தர்ப்பத்திற்காகத் தள்ளி வையுங்கள்.
இனிப்பான சொல்லும் பூரிப்பான கனிவும்
நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.
உங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள்.
தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.
மனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழைக்கலாம்.
நட்பும் இனிய நிகழ்வுகளை மீட்டுதலும்
மனைவிக்காக நேரத்தை ஒதுக்குங்கள்.
நல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நீங்களிருவரும் ஆனந்தமாகக் கழித்த அனுபவங்களை இருவரும் தனித்து இருக்கும்பொழுது மீட்டிப் பாருங்களேன்.
விளையாட்டும் கவன ஈர்ப்பும்
நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.
ஒருவருக்கொருவர் போட்டி போட்டு, பந்தயங்களில் ஈடுபடுங்கள். அது விளையாட்டாகவோ, குர்ஆன், நபிமொழி, பொதுஅறிவு போன்ற கல்விகளைக் கற்பதிலோ அல்லது வேலை செய்வதிலோ இருக்கலாம்.
இஸ்லாம் அனுமதித்த விஷயங்களை (விளையாட்டுப் போட்டிகள் போன்றவை...) பார்ப்பதற்கு வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.
இஸ்லாம் அனுமதிக்காத 'பொழுது போக்கு" விஷயங்களில் (சினிமா, ஸீரியல்கள் போன்றவற்றில்) உள்ள தீங்குகளை எடுத்துச் சொல்லி அவற்றை மறக்கடியுங்கள்.
வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவ
வீட்டு வேலைகளில் எதிலெல்லாம் மனைவிக்குத் துணைபுரிய முடியுமோ அதிலெல்லாம் உதவுங்கள். மிக முக்கியமாக அவள் நோயுற்றோ களைப்படைந்தோ இருந்தால்.
கடினமான வீட்டு வேலைகளில் மனைவி ஈடுபடும்பொழுது நன்றி தெரிவித்து அவளை உற்சாகப் படுத்துங்கள்.
இனியவளின் ஆலோசனை
குடும்ப விஷயங்களில் உங்கள் மனைவியுடன் கூடிஆலோசனை செய்யுங்கள்.
அவளிடம் ஆலோசனை செய்யப்பட வேண்டும் என அவள் எதிர்பார்க்கும் சிறப்புத் தருணங்களில் அவளின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள் (பிள்ளைகளின் திருமண விஷயங்கள் போன்றவை)
மனைவியின் கருத்துக்களை துச்சமாக நினைக்காமல் கவனமாகப் பரிசோதியுங்கள்.
மனைவின் கருத்து சிறந்ததாக இருந்தால் (உங்கள் கருத்தை புறந்தள்ளிவிட்டு) அவளின் கருத்தைத் தேர்ந்தெடுக்க தயக்கம் காட்டாதீர்கள்.
ஆலோசனை தந்து உதவியதற்காக அவளுக்கு நன்றி கூறலாம்.
பிறரைக் காணச் செல்லும்பொழுது
மார்க்கத்தில்/பழக்கத்தில் உயர்ந்த பெண்களுடன் தோழமை வைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். மேலும் உறவினர்களைப் பார்க்கச் செல்வதால் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துங்கள் (பார்க்கச் சென்றவர்களிடம் வீணான பேச்சுக்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்கினால் கண்டியுங்கள்).
அங்கு இஸ்லாமிய ஒழுக்கங்கள் பேணப்படுகின்றனவா என கவனித்துக் கொள்ளுங்கள்.
அவளுக்கு சங்கடம் தரக்கூடிய இடங்களுக்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்துவது நல்லதல்ல.
உங்களின் வெளியூர் பயணத்தின்பொழுது
மனைவிக்குத் தேவையான நல்ல அறிவுரைகளைக் கூறிவிட்டு அழகான முறையில் விடைபெறுங்கள்.
உங்களுக்காக இறைவனிடம் துஆ செய்யச் சொல்லுங்கள்.
நீங்கள் வீட்டில் இல்லாதபொழுது இரத்தபந்த உறவினர்களிடம் அவளுக்குத் தேவையான அவசியமான உதவிகளைச் செய்து தரும்படி கேட்டுக்கொள்ளலாம்.
குடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்துச் செல்லுங்கள்.
நீங்கள் வெளியூரில் இருக்கும் நாட்களில் டெலிபோன், கடிதம், ஈமெயில் போன்றவற்றின் மூலமாக மனைவியுடன் தொடர்பு கொள்ளுங்கள் (பிரிவின்பொழுதுதான் இருவருக்குமே ஒவ்வொருவரின் அருமையும் முழுமையாகப் புரியும். அப்பொழுது இவற்றின் மூலமாக நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வு, உங்களின் பரஸ்பர அன்பை வளர்க்கும்).
முடிந்தவரை சீக்கிரம் ஊர் திரும்ப முயற்சி செய்யுங்கள்.
திரும்பி வரும்பொழுது அவளுக்கு விருப்பமான பரிசுப் பொருள்களை வாங்கி வரலாம்.
எதிர்பாராத நேரத்திலோ இரவு நேரத்திலோ வீடு திரும்புவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் (உங்களுக்காக அலங்கரித்துக் கொள்ளாமல் இருப்பது அவளுக்கு சங்டத்தை ஏற்படுத்தும்).
பிரச்சினைகள் எதுவும் வராது என எண்ணினால் மனைவியையும் உடன் அழைத்துச் செல்லலாம்.
பொருளாதார உதவி
கணவன் என்பவன் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்பவனாக இருத்தல் வேண்டும்; மாறாக, கஞ்சத்தனம் செய்யக் கூடாது. (வீண் விரயமும் செய்யக் கூடாது).
அவளுக்கு ஊட்டிவிடும் உணவு முதல் அவளுக்காகச் செய்யும் அவசியச் செலவுகள்வரை அனைத்திற்கும் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
அவசியத் தேவைக்கான பணத்தை உங்களிடம் கேட்பதற்கு முன்னரே கொடுப்பதுதான் சிறந்தது.
அழகும் நறுமணமும்
நபிவழியின்படி அக்குள்முடி மற்றும் மறைவான பகுதியில் உள்ள முடிகளை நீக்கிவிடுவது.
எப்பொழுதும் நேர்த்தியாக அழகுபடுத்திக் கொண்டு சுத்தமாக இருப்பது.
அவளுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளுங்கள்.
தாம்பத்யம்
மனைவிக்கு தாம்பத்ய சுகம் கொடுக்க வேண்டியது கணவனின் கடமை என்பதை நினைவில் வையுங்கள் (இருவரில் ஒருவரின் உடல்நலக்குறைவு காரணமாகத் தள்ளிப் போட்டுக் கொள்ளலாம்).
பிஸ்மில்லாஹ் (இறைவனின் திருநாமத்தால்) என்று சொல்லி ஆதாரப்பூர்வமான பிரார்த்தனையைச் (ஷைத்தானின் தீங்கைவிட்டு இறைவனிடம் பிரார்த்தனை) செய்தவாறு ஆரம்பியுங்கள்.
இறைவன் படைத்திருக்கும் இன உறுப்பைத் தவிர்த்து வேறு வகைகளில் இல்லறச் சுகம் அனுபவிக்கக் கூடாது (மலப்பாதையின் வழியாக ஈடுபடுவது ஹராம்).
காதல் வார்த்தைகளுடன் முன்விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள்.
அவளை திருப்திப்படுத்தும் வரை தொடருங்கள்.
அமைதிக்குப் பிறகு நகைச்சுவையால் அவ்விடத்தைக் கலகலப்பாக்குங்கள்.
மாதவிடாய்க் காலத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடுவது ஹராம் (தடுக்கப்பட்டது).
பெண் என்பவள் அதிகம் வெட்கப்படுபவள். எனவே அவளின் கூச்சத்தை நீக்குவதில் எல்லை கடந்துவிடாதீர்கள்.
மனைவிக்கு விருப்பமற்ற, கஷ்டமான கோணங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.
அவளின் நோய் மற்றும் களைப்படைந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுங்கள்.
இரகசியங்களைப் பாதுகாத்தல்
படுக்கையறை விஷயங்கள் மற்றும் அவளின் சொந்தப் பிரச்சினைகள் போன்றவற்றை பிறரிடம் எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்தாதீர்கள்.
இறைவனுக்கு கட்டுப்படும் விஷயங்களில் உதவியாக இருப்பது
தஹஜ்ஜத் (இரவு) தொழுகைக்காக இரவின் கடைசிப்பகுதியில் எழுப்புங்கள்.
உங்களுக்குத் தெரிந்த திருக்குர்ஆன் அறிவை அவளுக்கும் போதியுங்கள்.
காலை-மாலை நேரங்களில் ஓதக்கூடிய திக்ரு (இறைநினைவுகளை - நபியவர்கள் காட்டித் தந்தவைகளை மட்டும்) அவளுக்கு போதியுங்கள்.
இறைவனின் பாதையில் செலவு செய்வதற்கு ஆர்வமூட்டுங்கள்.
ஹஜ்/உம்ராவிற்கு (பணம் மற்றும் உடல்) சக்தி பெற்றிருந்தால் அழைத்துச் செல்லுங்கள்.
மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மரியாதை செய்யுங்கள்.
அவளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களைப் பார்க்க அழைத்துச் செல்லுங்கள்.
உங்களின் வீட்டுக்குவர அவர்களுக்கு அழைப்புக் கொடுங்கள். அப்படி வரும்பொழுது அன்புடன் வரவேற்று உபசரியுங்கள்.
அவசியமான தருணங்களில் அவர்களுக்கு ஒத்தாசையாக இருங்கள்.
பொருளாதாரம் மற்றும் உங்களின் சக்திக்குட்பட்ட உதவிகளைச் செய்யுங்கள்.
உங்களுக்கு முன் மனைவி மரணித்துவிட்டால் நபியவர்களின் வழிமுறையைப் பேணி மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மனைவி (உயிருடன் இருக்கும்பொழுது) உதவி செய்ததுபோல் செய்து அன்பு பாராட்டுங்கள்.
இஸ்லாமியப் பயிற்சி
கீழே கொடுக்கப்பட்டவைகளை அறிந்து கொள்வதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது :
இஸ்லாத்தின் அடிப்படை
அவளின் பணிகள் மற்றும் உரிமைகள்
படித்தல் மற்றும் எழுதுதல்
இஸ்லாமியப் பாடங்களை மற்றும் அதன் நுணுக்கங்களை படிப்பதற்காக ஆர்வமூட்டுவது
பெண்கள் சம்பந்தமான இஸ்லாமிய சட்டங்கள்
வீட்டின் இஸ்லாமிய நூலகத்திற்காக புத்தகங்கள் மற்றும் கேஸட்டுகள் வாங்குவது.
மேன்மையான அக்கறை
வெளியில் போகும்பொழுது இஸ்லாமிய முறைப்படி பர்தா அணிந்திருக்கின்றாளா எனக் கவனித்துக் கொள்வது.
மஹரம் அல்லாத ஆண்களின் மத்தியில் கலந்திருப்பதைக் கண்டிப்பது. (அவளின் சிறிய மற்றும் பெரிய தந்தை மகன்களாக இருந்தாலும் சின்னம்மா பெரியம்மா மகன்களாக இருந்தாலும் உங்களின் தம்பியாக இருந்தாலும் தவறுதான்).
அதிகப்படியாகத் துருவி ஆராய்தலைத் தவிர்ந்து கொள்வது
உதாரணமாக, அவளின் ஒவ்வொரு பேச்சிலும் குற்றங்குறைகளை ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள். மனப்பூர்வமாக இல்லாமல் வாய் தவறிக்கூட பிழையாகப் பேசியிருக்கலாம்.
அவசர விஷயத்திற்காக அண்மையில் உள்ள இடங்களுக்குப் போவதைத் தடுக்காதீர்கள். (ஆனால் ஹிஜாப் பேணப்பட வேண்டும்)
தொலைப்பேசிக்கு (நீங்கள் அருகில் இல்லையென்றால்) பதில் அளிப்பதைக் கண்டிக்காதீர்கள். (குழைந்து பேசக்கூடாது என்று எச்சரிக்கை செய்யுங்கள்)
பொறுமையும் சாந்தமும்
மணவாழ்வில் கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபங்கள் வருவது சாதாரண விஷயம்தான் (வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதுபோல ஒவ்வொரு வீட்டிலும் இவை ஒவ்வொரு உருவத்தில் உலாவருகின்றன). அதிகப்படியான பொறுப்புகளில் உட்படுத்துவதும் சிறிய விஷயங்களைப் பெரிதாக்குவதும் போன்றவைதாம் திருமண பந்தத்தை முறித்துவிடும் அளவுக்குச் சென்று விடுகிறது.
இறைவன் விதித்த வரம்புகளை மீறும்போது கோபம் காட்டப்பட வேண்டும். உதாரணமாக தொழுகையைத் தாமதப்படுத்துதல், புறம் பேசுதல், தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்களை டி.வியில் பார்த்தல் இது போன்றவை.
உங்களின் விஷயங்களில் செய்த தவறுகளை பெருந்தன்மையுடன் மன்னித்துவிடுங்கள்.
தவறுகளைத் திருத்துதல்
முதலில் (முழுமனதோடு) நல்லுபதேசம் செய்யுங்கள்.
அதிலும் திருந்தாவிட்டால், தாம்பத்யத்தில் ஈடுபடாது கட்டிலில் திரும்பிப் படுத்துக் கொள்ளுங்கள். (உங்களின் கோப உணர்வை இவ்வாறு வெளிப்படுத்துவது) அதற்காக, படுக்கையறையை விட்டு வெளியேறுவதோ, வீட்டைவிட்டு வெளியில் சென்றுவிடுவதோ அல்லது அவளிடம் பேசாமல் இருப்பதோ அல்ல.
அதிலும் திருந்தாவிட்டால், கடைசி முயற்சியாக காயம் ஏற்படாமல் இலேசாக அடிக்கலாம் (அதற்கு அவள் தகுதியானவளாக இருந்தால் மட்டும்).
மனைவியை அடிப்பது நபிவழியில் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் என்றும் நபியவர்கள் மனைவியை அடிப்பவர்களாக இருக்கவில்லை என்பதையும் ஒவ்வொரு கணவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
மனைவி (எந்தக் காரணமும் இன்றி தாம்பத்தியத்திற்கு மறுத்தல், தொடர்ந்து தொழுகையை அதன் நேரத்தில் தொழாமல் இருத்தல், கணவனின் அனுமதியின்றி வீட்டைவிட்டு அதிக நேரத்திற்கு வெளியில் செல்லுதல் அல்லது எங்கே சென்றிருந்தாள் என்பதைக் கணவனுக்குச் சொல்ல மறுத்தல் இது போன்ற விஷயங்களில்) கட்டுப்பட மறுத்தால் கணவர் இந்த அனுமதியைப் பயன்படுத்தலாம்.
குர்ஆனில் (4வது அத்தியாயம் 34-ம் வசனத்தில்) கூறப்பட்டதுபோல் அவளுக்கு நல்லுபதேசம் செய்து படுக்கையிலிருந்து விலக்கி அதில் திருந்தாவிட்டால்தான் அடிக்கும் அனுமதியை கணவர் பயன்படுத்தலாம்.
காயம் உண்டாகும்படியோ முகத்திலோ மற்றும் மென்மையான பகுதியிலோ அடிக்கக் கூடாது.
செருப்பினால் அடிப்பது போன்ற மானபங்கப்படுத்தும் செயல்களில் ஒருக்காலும் ஈடுபடக் கூடாது.
மன்னிப்பும் கண்டிப்பும்
பெரிய தவறுகளை மட்டும் கணக்கில் எடுங்கள்.
உங்களின் விஷயத்தில் தவறு செய்தால் மன்னித்துவிடுங்கள். இறைவனின் விஷயங்களில் தவறு செய்தால் கண்டிக்கத் தவறாதீர்கள்.
தவறு செய்யக்கூடிய நேரங்களில் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய மற்றும் அவளின் நற்பண்புகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் (உங்களின் கோபம் குறையலாம்).
எல்லா மனிதர்களும் தவறு செய்யக்கூடியவர்கள்தாம். எனவே மன்னிக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். (மனச்சோர்வு, களைப்பு, மாதவிடாய் போன்றவற்றின் மன-உடல் உளைச்சல்களினால் தவறுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு).
சமையல் சரியில்லை என்ற காரணத்திற்காக மனைவியைக் கடிந்து கொள்ளாதீர்கள். நபியவர்கள் சமையல் விஷயத்திற்காக மனைவியைக் கண்டித்ததே இல்லை. பிடித்தால் சாப்பிடுவார்கள், பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாமல் இருந்துவிடுவார்கள்; தவிர எந்த விமர்சனமும் செய்ய மாட்டார்கள்.
தவறுகளை நேரிடையாக அவளிடம் வெளிப்படுத்துவதற்குமுன் வேறுவழியில் நயமாகச் சுட்டிக்காட்டுங்கள். ஏனென்றால் சில நேரத்தில் இது பயனுள்ளதாக இருக்கும்.
அவமரியாதை செய்யக்கூடிய வகையில் மனைவியைத் திட்டுவதைத் தவிர்ந்துக் கொள்ளுங்கள்.
பிரச்சினை பேசி தீர்த்துக் கொள்ளக்கூடியதாக இருந்தால், தனிமை கிடைக்கும்வரை பொருத்திருங்கள்.
மனைவிமீது கோபம் ஏற்பட்டால், உங்களை சரியான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவற்காக கோபம் குறையும்வரை சற்றுப் பொறுமை கொள்ளுங்கள்.
உங்கள் இல்லறம் இனிமையாகத் தொடர நல்வாழ்த்துகள்!
ஞாயிறு, 4 ஜூலை, 2010
இறுதியாக கேட்டுச் செல்!
எமை விரட்டி வரும்
வேண்டாத வேதனைகள்!
ம்…!
பிரிவுகள் என்பது
உனக்குள்ளும் எனக்குள்ளும்
இறுதிவரை இல்லை
என்றுதானே இருவரும்
இறுமாப்புக் கொண்டிருந்தோம்…?
இதற்குள் எப்படி
இருவரையும் மீறி
இப்படி ஒரு பிரிவு…?
ஓ…!
என் மனதை
புரிந்து கொள்ளாமல்…
பூ மீது
ஆணி அடிக்கும்
வலியை தந்து
பிரிந்து செல்கிறேன் என்கிறாய்!
ம்… சரி
பிரியப் போகும் இவ்வேளையில்
ஒன்று சொல்கிறேன்
இதையும்
இறுதியாக கேட்டுச் செல்!
பிரிவு என்பது
எனக்கும் உனக்கும் மட்டும்தான்
நம் காதலுக்கு அல்ல
நீயின்றி நானில்லை
நீயின்றி நானில்லை என்றாய்
பின் தீயின்மேல் எனைவீசி கொன்றாய்
நேற்றிருந்தோம் வெண்ணிலவில் ஒன்றாய்
இன்று வேறொருத்தன் கைப்பிடித்து சென்றாய்....
--------------------------------------------------------------------------------
சற்றே வியந்துதான் போகிறேன்
உன் மனதின் நிறம் மாறும்
குணத்தை எண்ணி....
அளவில்லா ப்ரியங்களுடன்
அணுஅணுவாய் என்னை காதலிக்க
முடிந்த உன்னால் எப்படி இன்னொரு
இதயத்தையும் காதலிக்க முடிந்தது?
நேற்று விளையாட்டாய் உன் கைப்பேசியை
எடுத்துப் பார்க்கையில்தான் என் மனம்
தற்கொலை செய்துகொண்டது.
எனக்கு மட்டுமே சொந்தமான
உன் Sent items' ல் யாரோ ஒருவருக்கு
நீ அனுப்பிய ஐலவ்யூக்களும், உம்மாக்களும்
என்னுள் ஏற்படுத்திய வலியை
உன்னால் உணரக்கூடுமா?
என் குரல் சேமித்து வைக்கப்பட்டிருந்த
உன் ரெக்கார்டிங்கில் இப்போது
இன்னொருவர் குரல்...
உன் தொலைபேசியில் இருந்த என்
அத்தனை புகைப்படங்களும் எங்கே போயிற்று?
உன்னால் பதில் சொல்ல முடிகிறதா?
என் முன்னாலே நீ உன் புதுக்காதலுடன்
சிரித்து பேசுகையில் நொடிக்கொருமுறை
உன் காதலின் நினைவுகளால்
கற்பழிக்கப்படுகிறேன்.
இறைவா என் எதிரிக்கும் வேண்டாம்
இப்படி ஒரு வேதனை.
எனக்கு நிச்சயமாய் தெரிகிறது
உன் ஸ்பரிசங்களும், உன் முத்தங்களும்
இனி இன்னொருவருக்கு தான் சொந்தம் என்று...
மூளைக்கு புரியும் இந்த உண்மையை
மனம் அடம்பிடித்து ஒப்புக்கொள்ள மறுக்கிறது.
உன் வாசம் படிந்த கைக்குட்டை..
உன்னுடன் கண்டு களித்த சினிமா டிக்கெட்..
ஓயாமல் சிரிக்கும் உன் புகைப்படம்..
காதலுடன் நீ வரைந்த கிரீட்டிங் கார்ட்
என உன்னை மட்டுமே நினைத்துக் கொண்டே
இருக்க வேண்டும் என நான் பத்திரப்படுத்திய
உன் நினைவுகள் அனைத்தும் வெறும்
நினைவுச் சின்னங்களாக மட்டுமே இருக்கும் என
சத்தியமாய் நினைக்கவில்லை...
என் வசந்த காலத்தின்
ஒரு பக்கத்தை முற்றிலும்
இலையுதிர் காலமாய் செய்தாய்.
மனம் வலிக்கும் நேரங்களில்
உன் நினைவுகள் மட்டுமே சுகமாய் இருக்கும்.
ஆனால் இன்றோ என் மனவலிக்கு
முழுமுதற் காரணமும் நீயாய்...
அழுவது அவமானச் சின்னம்
என்பது என் கொள்கை.
ஆனால் இன்றோ என் கண்ணீர்
சுரப்பிகள் கூட வற்றிவிட்டன.
தற்கொலை செய்துகொள்வது
கோழைத்தனத்தின் உச்சம் என நினைத்திருந்தேன்.
கண் முன்னே இப்படி ஒரு வலியை
உணர்கையில்தான் தோன்றுகிறது
தற்கொலை பாலைவனத்தில் நீரைப்போல்...
உன் மனதின் கொடூரத்தை தாங்க இயலாமல்
ஒரு நொடியில் மணிக்கட்டை
கூரிய பிளேடால் அறுத்துக் கொண்டேன்.
நீ கொடுத்த வலியைவிட அது ஒன்றும்
வேதனை நிறைந்ததாய் இருக்கவில்லை.
என் காதல் நரம்புகளை அறுத்துவிட்டு,
நீ வீணை வாசிக்கிறாய்.
என் சந்தோஷ சிறகுகளுக்கு தீ வைத்துவிட்டு,
நீ குளிர்காய்கிறாய்.
யாரை நோக்கியோ உன் பார்வைகள்.
குருடாய் போனது என் உலகம்.
யார் பெயரையோ உச்சரிக்க தயாராய் உன் இதழ்கள்,
ஊமையாகிப் போனது என் தேசம்.
என் SMS சேமித்து வைத்திருப்பாய்.
எதற்கு என்று கேட்டால்,
உன் நினைவுகள் வரும் போது
எடுத்து படித்து கொள்ள என்பாய்..
இப்போது உன் Outbox' ல் கூட என் SMS இல்லை.
ஏன் இப்போதெல்லாம் என் நியாபகம்
உனக்கு வருவதில்லையா?
நான் அனுப்பிய
சில காதல் மெசேஜ்களையும்,
படங்களையும் சேமித்து வைத்திருந்தாய்.
சில நொடிகள் சந்தோஷப்பட்டது என் மனம்.
பிறகுதான் தெரிந்து கொண்டேன்
யாரோ ஒருவருக்கு Forward செய்ய அதை
எல்லாம் நீ பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாய் என்று..
"மனம் மரணமடைந்தது" என்ற ஷெல்லியின்
வார்த்தையை அனுபவித்து உணர்ந்தேன் அன்று..
வாழ்ந்துகாட்டு! வாழ்ந்துகாட்டு
என்று என் உறவுகள் எனக்கு
ஆறுதல் சொல்கின்றனர்.
இனி நான் எத்தனை கோடிகள் சம்பாதித்தாலும்
நீ எனக்கு கொடுத்த அந்த காதலை
என்னால் சம்பாதிக்க முடியுமா?
என்னதான் நான் பென்ஸ் காரிலே வந்து
உன் முன்னால் இறங்கினாலும்
உன் துணையுடன் உன்னை பார்க்க நேர்கையில்
என்னால் சிரிக்க முடியுமா?
வேறு யாரை நான் கட்டி அணைத்தாலும்
அந்த அணைப்பில் உன் வெப்பத்தை
என்னால் மறந்துவிட முடியுமா?
எத்தனையோ அழகான கவிதைகளை
என்னை எழுத தூண்டியது நீதான்.
இன்று துயரங்களையும் சுமக்கும் பக்குவத்தை
எனக்கு தந்து இப்படியும் கவிதைகள் எழுதலாம்
என புதிய அனுபவத்தையும் எனக்கு கற்று தந்தாய்.
உனக்கு நன்றி.
என் பெயர் சொல்லி அழைக்க மறந்து,
யாரோ ஒருவர் பெயரை சொல்லி நீ அழைத்தாய்,
அந்த ஒரு நொடியில் லேசாய் உதடு கடித்து
ஒற்றை வார்த்தையில் "சாரி" என்று
சொல்லிவிட்டு போய் விட்டாய்.
நேற்றே நான் இறந்து விட்டேன்.
உன் மனதின் நிறம் மாறும்
குணத்தை எண்ணி....
அளவில்லா ப்ரியங்களுடன்
அணுஅணுவாய் என்னை காதலிக்க
முடிந்த உன்னால் எப்படி இன்னொரு
இதயத்தையும் காதலிக்க முடிந்தது?
நேற்று விளையாட்டாய் உன் கைப்பேசியை
எடுத்துப் பார்க்கையில்தான் என் மனம்
தற்கொலை செய்துகொண்டது.
எனக்கு மட்டுமே சொந்தமான
உன் Sent items' ல் யாரோ ஒருவருக்கு
நீ அனுப்பிய ஐலவ்யூக்களும், உம்மாக்களும்
என்னுள் ஏற்படுத்திய வலியை
உன்னால் உணரக்கூடுமா?
என் குரல் சேமித்து வைக்கப்பட்டிருந்த
உன் ரெக்கார்டிங்கில் இப்போது
இன்னொருவர் குரல்...
உன் தொலைபேசியில் இருந்த என்
அத்தனை புகைப்படங்களும் எங்கே போயிற்று?
உன்னால் பதில் சொல்ல முடிகிறதா?
என் முன்னாலே நீ உன் புதுக்காதலுடன்
சிரித்து பேசுகையில் நொடிக்கொருமுறை
உன் காதலின் நினைவுகளால்
கற்பழிக்கப்படுகிறேன்.
இறைவா என் எதிரிக்கும் வேண்டாம்
இப்படி ஒரு வேதனை.
எனக்கு நிச்சயமாய் தெரிகிறது
உன் ஸ்பரிசங்களும், உன் முத்தங்களும்
இனி இன்னொருவருக்கு தான் சொந்தம் என்று...
மூளைக்கு புரியும் இந்த உண்மையை
மனம் அடம்பிடித்து ஒப்புக்கொள்ள மறுக்கிறது.
உன் வாசம் படிந்த கைக்குட்டை..
உன்னுடன் கண்டு களித்த சினிமா டிக்கெட்..
ஓயாமல் சிரிக்கும் உன் புகைப்படம்..
காதலுடன் நீ வரைந்த கிரீட்டிங் கார்ட்
என உன்னை மட்டுமே நினைத்துக் கொண்டே
இருக்க வேண்டும் என நான் பத்திரப்படுத்திய
உன் நினைவுகள் அனைத்தும் வெறும்
நினைவுச் சின்னங்களாக மட்டுமே இருக்கும் என
சத்தியமாய் நினைக்கவில்லை...
என் வசந்த காலத்தின்
ஒரு பக்கத்தை முற்றிலும்
இலையுதிர் காலமாய் செய்தாய்.
மனம் வலிக்கும் நேரங்களில்
உன் நினைவுகள் மட்டுமே சுகமாய் இருக்கும்.
ஆனால் இன்றோ என் மனவலிக்கு
முழுமுதற் காரணமும் நீயாய்...
அழுவது அவமானச் சின்னம்
என்பது என் கொள்கை.
ஆனால் இன்றோ என் கண்ணீர்
சுரப்பிகள் கூட வற்றிவிட்டன.
தற்கொலை செய்துகொள்வது
கோழைத்தனத்தின் உச்சம் என நினைத்திருந்தேன்.
கண் முன்னே இப்படி ஒரு வலியை
உணர்கையில்தான் தோன்றுகிறது
தற்கொலை பாலைவனத்தில் நீரைப்போல்...
உன் மனதின் கொடூரத்தை தாங்க இயலாமல்
ஒரு நொடியில் மணிக்கட்டை
கூரிய பிளேடால் அறுத்துக் கொண்டேன்.
நீ கொடுத்த வலியைவிட அது ஒன்றும்
வேதனை நிறைந்ததாய் இருக்கவில்லை.
என் காதல் நரம்புகளை அறுத்துவிட்டு,
நீ வீணை வாசிக்கிறாய்.
என் சந்தோஷ சிறகுகளுக்கு தீ வைத்துவிட்டு,
நீ குளிர்காய்கிறாய்.
யாரை நோக்கியோ உன் பார்வைகள்.
குருடாய் போனது என் உலகம்.
யார் பெயரையோ உச்சரிக்க தயாராய் உன் இதழ்கள்,
ஊமையாகிப் போனது என் தேசம்.
என் SMS சேமித்து வைத்திருப்பாய்.
எதற்கு என்று கேட்டால்,
உன் நினைவுகள் வரும் போது
எடுத்து படித்து கொள்ள என்பாய்..
இப்போது உன் Outbox' ல் கூட என் SMS இல்லை.
ஏன் இப்போதெல்லாம் என் நியாபகம்
உனக்கு வருவதில்லையா?
நான் அனுப்பிய
சில காதல் மெசேஜ்களையும்,
படங்களையும் சேமித்து வைத்திருந்தாய்.
சில நொடிகள் சந்தோஷப்பட்டது என் மனம்.
பிறகுதான் தெரிந்து கொண்டேன்
யாரோ ஒருவருக்கு Forward செய்ய அதை
எல்லாம் நீ பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாய் என்று..
"மனம் மரணமடைந்தது" என்ற ஷெல்லியின்
வார்த்தையை அனுபவித்து உணர்ந்தேன் அன்று..
வாழ்ந்துகாட்டு! வாழ்ந்துகாட்டு
என்று என் உறவுகள் எனக்கு
ஆறுதல் சொல்கின்றனர்.
இனி நான் எத்தனை கோடிகள் சம்பாதித்தாலும்
நீ எனக்கு கொடுத்த அந்த காதலை
என்னால் சம்பாதிக்க முடியுமா?
என்னதான் நான் பென்ஸ் காரிலே வந்து
உன் முன்னால் இறங்கினாலும்
உன் துணையுடன் உன்னை பார்க்க நேர்கையில்
என்னால் சிரிக்க முடியுமா?
வேறு யாரை நான் கட்டி அணைத்தாலும்
அந்த அணைப்பில் உன் வெப்பத்தை
என்னால் மறந்துவிட முடியுமா?
எத்தனையோ அழகான கவிதைகளை
என்னை எழுத தூண்டியது நீதான்.
இன்று துயரங்களையும் சுமக்கும் பக்குவத்தை
எனக்கு தந்து இப்படியும் கவிதைகள் எழுதலாம்
என புதிய அனுபவத்தையும் எனக்கு கற்று தந்தாய்.
உனக்கு நன்றி.
என் பெயர் சொல்லி அழைக்க மறந்து,
யாரோ ஒருவர் பெயரை சொல்லி நீ அழைத்தாய்,
அந்த ஒரு நொடியில் லேசாய் உதடு கடித்து
ஒற்றை வார்த்தையில் "சாரி" என்று
சொல்லிவிட்டு போய் விட்டாய்.
நேற்றே நான் இறந்து விட்டேன்.
உன்னை நினைத்து துடிக்குமடி என் இதயம்
கனவுகளில் மலர்வதில்லை காதல்
இதயத்தில் மலர்வதே காதல்
இதயம் இறக்கும் வரை உயிரானவளே
உன்னை நினைத்து துடிக்குமடி என் இதயம்
இதயத்தில் மலர்வதே காதல்
இதயம் இறக்கும் வரை உயிரானவளே
உன்னை நினைத்து துடிக்குமடி என் இதயம்
வெள்ளி, 18 ஜூன், 2010
மழை பெய்யும் நேரம்...
ஏனோ இன்னும் தாமதம்....??
ஓர் நாள்...... உன்னுடன்
ஒழுங்காய் பேசவில்லை எனில்..
ஒளியற்று போவதேனோ என் முகமே..!
என் செய்தாய் என் அன்பே
எப்பொழுதும் உன் நினைவே..!
உன் குரலில் தான் என் ஜீவன் உளதோ?
உன் வார்த்தையில் தான் என் வசந்தம் உளதோ?
கண் மூடி யாசித்தேன்....
கடிதம் ஒன்று நீ வரைந்தாய்..
வரைந்த கடிதத்தில்..
வடிவாக உன் முகம் கண்டேன்..!
எனை மீட்க எப்போது வருவாயோ?
ஏங்குகிறேன் உன் வரவிற்காய்....
ஏனோ இன்னும் தாமதம் என்னுயிரே..?
புதன், 9 ஜூன், 2010
செவ்வாய், 8 ஜூன், 2010
உன் ஐந்தாவது காதலன்.ZZZZZZZ
அன்பு XXXXX
கடந்த ஆறு மாத காலமாக என்னை(யும்) லவ்வுனதுக்கு மிக்க நன்றி. நீ இந்த கடிதத்தை படித்துக் கொண்டிருக்கும் இந் நேரத்தில், உனக்கு புதிய இ.வா.காதலன் கிடைத்திருப்பான் என நம்புகிறேன். அப்படி இன்னும் கிடைக்கவில்லையெனில் கிடைப்பதற்காக அந்த எல்லாம் வல்ல கடலையாண்டவரை வேண்டுகின்றேன். சரி, விஷயத்துக்கு வர்றேன்.நிற்க, ( கடிதமெழுதுன இதெல்லாம் போடனும்)உன்னை மறப்பதற்காக, அந்த வலியை குறைப்பதற்காக மட்டும் நான் அடுத்த தெருவில் ஒருத்தியை இப்போது லவ்வுகிறேன். ஆமாம், இது உனக்கு தெரிஞ்சு (மட்டும்) இது என்னோட நாலாவது காதல்தான். முந்தைய காதல்களில் நிறைய கற்றுக் கொண்டதால், இப்போ என்னால ரொம்ப ஈஸியாவே லவ்வ முடியுது.காதல் வந்தாதான் கவிதை எழுத வரும்ன்னு உனக்கு தெரியும். ஆனா, இப்போ எனக்கு கவிதை எழுதறதுக்கு போரடிக்கிது. நாலு (ள்)ஆகிப் போச்சுல.அதனாலதான் உனக்கு கடிதம் எழுதுறேன். அதே மாதிரி, இப்பல்லாம் கவிதை எழுதுறது அவ்ளோ ஈஸி இல்ல. எல்லாரும் களத்தில இறங்கிட்டாய்ங்கே. அவனவன் பிரிச்சு மேய்ஞ்சுட்ருக்காங்கே. சரி, அவனுக கவிதையெல்லாம் காப்பியடிச்சு என் ஃபிகர்கிட்ட கொடுத்துராலாம்னு பார்த்தா, இப்போல்லாம் Blogஅ எல்லாரும் கவனிக்க ஆரம்பிச்சுட்டாங்கலாம்ல. அப்பறம் அவ என்னைய "கப் ஐஸ்" அடிச்சுருவா..! அதனால, நாம லவ்வும்போது நான் உன்னை வச்சு எழுதுன கவிதையெல்லாத்தையும் (?) எனக்கு திருப்பி அனுப்பி விட்டா நல்லாருக்கும். நான் வேற அத ஜெராக்ஸ் எடுத்து வைக்க மறந்துட்டேன். அப்டியே நான் அவளோட பேரை மட்டும் மாத்தி எழுதி குடுத்துருவேன். தயவு செஞ்சு குடுத்துட்டா,உனக்கு புண்ணியமாப் போகும் தங்கச்சி.
அப்பறம் இன்னோரு மேட்டரு, உன்கிட்ட என்னோட ஒரு அழகான (?) ஃபோட்டோ ஒன்னு இருக்குல்ல, அதையும் லெட்டர்ஸோட சேர்த்து அனுப்பி வச்சா, நல்லாருக்கும். துரதிருஷ்டவசமா,அது நான் மொத மொதல்ல லவ்வ ஆரம்பிக்கிம்போது எடுத்ததுனால ,அந்த ஃபோட்டோவுல மட்டும்தான் நான் அழகா இருப்பேன்.அடுத்து என்னன்னா, நம்ம லவ்வுன இந்த ஆறு மாசத்துல நான் உனக்கு ஏகப்பட்ட காசு செலவழிச்சுருக்கேன். அது எவ்வளவு எனன் விவர்ம்ன்றத இங்க சொல்லிருக்கேன். அந்த காசையெல்லாம் கூடிய சீக்கிரம் திருப்பி கொடுத்திட்டன்னா, நான் என்னோட புது லவ்வருக்கு செலவழிக்க உதவும். கொஞ்சம் கீழ படிச்சு பாரேன்...
மதியம் மற்றும் இரவு உணவு சாப்பிட்ட வகையில் ரூ 895/-* கூல் ட்ரிங்க்ஸ் குடித்த வகையில் ரூ2938/-* ஸ்நாகஸ் (வகையறக்கள்) தின்ற வகையில் ரூ5645/-* ஜூஸ் குடித்த வகையில் ரூ3845/-* சினிமாவுக்கு கூட்டிட்டு போன வகையில் ரூ1235/-* நெட் சாட்டிங் வகையில் ரூ1499/-* மொபைல் ரீசார்ஜ் செய்து குடுத்த வகையில் ரூ2546/-* பெட்ரோல் செலவு வகையில் ரூ4255/-* கிஃப்ட் வாங்கித் தந்த வகையில் ரூ7850/-
மொத்தம் 30,708 ரூபாய் ( முப்பதாயிரத்து எழு நூற்றியெட்டு ரூபாய் மட்டுமே..!) செக் ஏற்றுக் கொள்ளப்பட மாட்ட்து. ரொக்கமாக கொடுக்கவும்.
மேல சொன்ன அமௌன்ட, கூடிய சீக்கிரம் செட்டில் பண்ணீரு.அப்பறம் நான் உனக்கு குடுத்த கிஃப்ட்ஸ் எதாவது நீ வச்சுருந்தன்னா, அத நான் பாதி விலைக்கு வாங்கிக்கிறதுக்கும் தயாரா இருக்கேன்.நான் ஒன்னும் அந்தளவுக்கு, இரக்கமில்லாதவன் இல்ல. அதனால் நீ எனக்கு எழுதுன லவ்லெட்டர்ஸ் எல்லாத்தையும் (சுமார் 3 கிலோ எடையுள்ள) இதோட சேர்த்து அனுப்பி வச்சுருக்கேன்.பெற்றுக் கொள்ளவும். மேலும் நீ எனக்காக எதுவும் செலவு செய்திருந்தால், திருப்பி வாங்கிக் கொள்ளவும். ஆனால், நீதான் என் கூட வரும்போது மாட்டும் பர்ஸ மறந்து வச்சுட்டு வந்துருவியே. அப்பறம் எப்பிடி செலவாகியிருக்கும்..? மட்டும் விளக்கம் கொடுக்கவும்.
எது எப்பிடியோ,YYYYYY உடனான உனது தற்போதைய ஆறாவது காதலென கேள்விப்பட்டேன். அந்த காதல்(லாவது) சுபத்தில் முடியட்டுமென, எல்லாம் வல்ல அந்த கடலையாண்டவரை வேண்டுகின்றேன். நன்றி. மேல சொன்ன அமௌன்ட,கூடிய சீக்கிரம் செட்டில் பண்ணவும்.
இப்படிக்கு,
உன் ஐந்தாவது காதலன்.ZZZZZZZ
மனதினில் என் மனதினில்
மனதினில் என் மனதினில் உந்தன் முகம் வந்து ஏனோ ஏனோ என்னை கொல்கிறது..
காதலும் நீயேன வாழ்வும் நீயென வாழ்க்கையை தொலைத்தேன்வாலிப வயதினிலே... உறவுகள் இருந்தும் என் உயிர் நீயேன உயில் எழுதி தரவா உயிர் ஓவியமே உறங்கா உன் நினைவுகள் உறக்கத்திலும் உளரலாய்காற்றினில் கலக்குதடா
காதல் வலி தந்தவனே..
என் கண்ணை பாரடா என் இதயத்தின் வலிகள் இரு விழிகளிலும் தெரியுமடா இதயத்தில் பூவாய் மலர்ந்தவனே.. ஏனடா என் இதயத்தை புயலடித்த தேசமாய் மாற்றினாய்..
காதலில் என்னோடு சேர்ந்து வாழ்ந்தவனே.. கண்ணீரையும் கனவுகளையும்
காதல் பரிசாக தந்து விட்டு போனாயேயடா காதல் வலி தந்தவனே.. காதல் என்னைவிட்டு பிரியவில்லை நீமட்டும் ஏனடா என் காதலை விட்டு பிரிந்தாய்.. என் காதலும் எங்கே என் கவிதையும் எங்கே சொல்லிவிட்டு போ இல்லை என்னை கொன்று விட்டு போ..
மறுபடியும் எழுவேன்
உன்னிடத்தில் கொண்ட காதல் - சொல்ல
உலகத்தில் மொழி இல்லை எனக்குஉன்னிடத்தில் சொல்ல – அதனைஉண்மையில் தைரியம் இல்லை – அதனால் என்னை நான் வருத்திக் கொண்டு எனக்குள் அதை புதைத்துக் கொண்டேன்எனக்குள்ளே புதைத்த காதல் என்னை இங்கு வாட்டுதம்மா…..!
தனிமையில் இருந்த என்னை தயவுடனே எடுத்து அனைத்து - இன்று வெருமைக்குள் தள்ளி விட்டாயாவெறுக்கிறேன் என்னை நானே நீ தந்த அன்பு – அது என்றும்நிழல் போல எந்தன்னுடன்நியமாக சொல்லுகின்றேன்நீ நன்றே வாழ்ந்திட வேண்டும் மரணத்தின் வேதனை தனைமறுபடியும் உணரவைத்தாய் - எனினும்மறுபடியும் எழுவேன் என்று மனதினில் உறுதி கொண்டேன்…..
உலகத்தில் மொழி இல்லை எனக்குஉன்னிடத்தில் சொல்ல – அதனைஉண்மையில் தைரியம் இல்லை – அதனால் என்னை நான் வருத்திக் கொண்டு எனக்குள் அதை புதைத்துக் கொண்டேன்எனக்குள்ளே புதைத்த காதல் என்னை இங்கு வாட்டுதம்மா…..!
தனிமையில் இருந்த என்னை தயவுடனே எடுத்து அனைத்து - இன்று வெருமைக்குள் தள்ளி விட்டாயாவெறுக்கிறேன் என்னை நானே நீ தந்த அன்பு – அது என்றும்நிழல் போல எந்தன்னுடன்நியமாக சொல்லுகின்றேன்நீ நன்றே வாழ்ந்திட வேண்டும் மரணத்தின் வேதனை தனைமறுபடியும் உணரவைத்தாய் - எனினும்மறுபடியும் எழுவேன் என்று மனதினில் உறுதி கொண்டேன்…..
என்னிலிருந்து உன்னைத்தவிர…!
ரோஜாவையெல்லாம் கூந்தலில்தான்சூடிக்கொள்கிறாய்.முட்களை மட்டும் ஏனடி மனதில்ரோஜாவையெல்லாம் கூந்தலில்தான்சூடிக்கொள்கிறாய்.முட்களை மட்டும் ஏனடி மனதில்உன் கரம் மட்டும் அறிந்த என் நெஞ்சத்தைஉன் நெஞ்சம் கொண்டு பழுது பார்க்க வா ....என் ஆயுள் முழுவதும்
உன் அங்கம் மட்டும் பணி செய்ய வா .... என் விரல் கொண்டுஉன் உடல் திண்டிக் கொள்ள வா ....உன் உதட்டு வரிகளில்என் உதடுகளால் எழுதிக் கொள்ள வா ....உன் விரல்களால்என் தலை முடிகளை தரம் பார்க்க வா ....உன் வெட்க்கத்தை என்னில் ஊற்றி..என் வீரத்தை பிடுங்கிக் கொள்ள வா ....என்னில் உன்னை…உன்னில் என்னை அடைத்துக் கொள்ள வா ....என் சுவாசப் பைகளில்உன் வாசத்தை மட்டும் நிரப்ப வா ....உன் இடையினை என் கரங்களால்கட்டிப் போட வா ....உன் தீண்டல்களில்என் தோல்களை தூய்மைப்படுத்த வா ....உன் சிரம் தாழ்த்தி சினுங்க வைக்க வா ....உன் இடை சுற்றஎன் கரம் வேண்டும் வா ....அன்பே உன்னைமுடிந்தவரை முத்தமிட்டுக்கொள்ள வா ....உன் கனவுப் பொய்களைஎன்னில் மட்டும் நிஜமாக்க வா ....
எதை வேண்டுமானலும் எடுத்துக் கொள்ள வா ..... ஆனால்?
என்னிலிருந்து
உன்னைத்தவிர…!
பிடிக்கவில்லை
பிடிக்கவில்லைஎனக்கு...இந்த அரசியலும்அதன் விஷ வேஷமும்...!பிடிக்கவில்லைஎனக்கு...இந்த நகரமும்அங்கே தூசிக் காற்றும்...!பிடிக்கவில்லைஎனக்கு...இந்த பணப் பேய்களும்மக்கிய மனித நேயமும்...!பிடிக்கவில்லைஎனக்கு...இந்த உழைக்காத வர்க்கமும்அதன் உழைப்புச் சுரண்டலும்...!பிடிக்கவில்லைஎனக்கு..நான் வாங்கிய பட்டமும்..அதன் மேல் சிலந்திக் கூடும்...!பிடிக்கவில்லைஎனக்கு...இந்த தியேட்டர் கூட்டமும்வீணாகும் முயற்சியும்...!பிடிக்கவில்லைஎனக்கு...பாழும் வறுமையும்..நொறுங்கிய மனங்களும்...!பிடிக்கவில்லைஎனக்கு...இந்த காதலும்அதன் சதைக் கவர்ச்சியும்...!பாதம் வருடிகெஞ்சுகிறேன் அம்மா...மீண்டும்தாயேன் -உன்கருப்பையில் இடம்...!!!
என் தோட்டத்துக்கு ஒரு தடவை வந்து செல் அந்த ரோஜா நினைத்து கொண்டு இருக்கிறது ,உலகில் தான்தான் அழகானது என்று
நான் வாழனும்.. வாழ்வேன்.
ஹலோ எப்படி இருக்கீங்க?பார்த்து ரொம்ப நாள் ஆச்சி.. அப்புறம்.. வேலை எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு உங்களுக்கு? வீட்ல எல்லாம் நல்லா இருக்காங்களா? எல்லோரையும் விசாரிச்சதா சொல்லுங்க .. ஆமா.. இனிமே நான் விசாரிச்சத சொல்லி என்ன பண்ண போறீங்க.. எல்லோரும் நல்லா இருக்காங்கல்ல அது போதும்..ஏன் இப்படி பேசுறனா ? ஓ.. நான் இதுவரைக்கும் உங்க கிட்ட சொல்லல இல்ல.. நாளைக்கு நான் இருக்க மாட்டேன்.. இல்லங்க ஊருக்கெல்லாம் போகல.. உலகத்த விட்டே போக போறேன்.. ஆமா இன்னைக்கு ராத்திரி நான் தற்கொலை பண்ணிக்க போறேன்.ஏன்னு கேட்டா என்ன சொல்றது ? எனக்கு வாழ பிடிக்கல அவ்ளோ தான்..ச்சே ச்சே.. காதல் தோல்வி.. வேலை கிடைக்கல.. குடும்பத்துல கஷ்டம் இப்படி எந்த அற்பமான காரணமும் இல்லங்க..அப்புறம் ஏன் இந்த முடிவா? சரி வாங்க உக்கார்ந்து பேசுவோம்..என்னவோ தெரியலங்க.. கொஞ்ச நாளா.. மனசு ஒரு மாதிரியா இருக்கு.. யார் கூடவும் பேச பிடிக்கல.. தனியா இருக்குற மாதிரி ஒரு பீலிங்..நல்ல குடும்பம்.. தேவையான அளவுக்கு சம்பளம் வர வேலை, எதையும் பகிர்ந்துக்க நண்பர்கள், சந்தோசமான வாழ்கை ன்னு எல்லாம் இருந்தும் எதோ ஒரு வெற்றிடம் இருக்குற மாதிரி தோணுது மனசுல.. எனக்கும் சில சமயம் சில பேர பார்த்தா தோணுது.. இவன் எல்லாம் எந்த நம்பிக்கைல வாழுறான்? நாம ஏன் சாகனும்னு?ஆனா அப்புறம் ஒரு தனிமை கிடைக்கும் போது யோசிச்சி பார்த்தா சாகனும்னு தோணுதே..அட போன மாசம் கூட கடை தெருவுல ஒரு புதுசா கல்யாணம் ஆனா ஜோடிய பார்த்தேன்.. பொண்ணு சும்மா ரதி மாதிரி... ஸ்ஸ்ஸ்ஸ்........ என்னத்த சொல்ல... ஆனா அவ புருஷன்.. அந்த கொடுமைய ஏன் கேக்குறிங்க.. அப்போ கூட நினச்சேன்.. இந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சதுக்கு கல்லை கொண்டு அடிச்சி கொன்னுருக்கலாம்னு.. ஆனாலும் அந்த பொண்ணு அவன் கூட சகிச்சிகிட்டு வாழுது .. ஒருவேளை அவளுக்கு புடிச்ச குணம் அவன் கிட்ட இருக்குதோ என்னவோ.. இருந்தாலும் கடவுளோட காம்பினேஷன் செலெக்ஷன் கொடுமைய நினச்சி ரொம்ப கோபம் வந்துசிங்க.அது கூட பரவாஇல்ல போன வாரம் மார்க்கெட் போய் இருந்தேன்.. தக்காளி கிலோ எட்டு ரூபான்னு வித்துகிட்டு இருந்தவன் ஒரு வெளிமாநிலகாரண பார்த்ததும் kg 15 ருபீஸ்ன்னு இங்கிலிஷ்ல சொல்லி விக்குறான்.அப்போ கூட தோணிச்சி இப்படி ஊரை ஏமாத்தி பொழைக்கிற இவன் எல்லாம் வாழும் போது நான் ஏன் சாகனும்னு.. ஆனாலும் நான் சாக விருப்பபடுறேன்.இன்னைக்கு காலைல கூட நான் பாட்டுக்கு வண்டில போய்கிட்டு இருந்தேன்.. வழில ஒருத்தன் லிப்ட் கேட்டான் தெரிஞ்சவன்னு நம்பி கூட்டிகிட்டு போனேன்.. பயணம் செஞ்ச 5 நிமிஷத்துல ஒரு சோகக்கதைய சொல்லி 50 ரூபா கறந்துட்டான் . ஏமாந்தது என்னோட தப்பு தான் இருந்தாலும் ஏமாத்துறவன் எல்லாம் சந்தோசமா வாழுற உலகத்துல நான் ஏன் சாகனும்? ஆனாலும் தோணுதே...இந்த உலகத்துல மனுஷன்ல இருந்து அவன் உருவாக்குன கடவுள் வரைக்கும் யாரும் நல்லவங்க இல்லங்க. எல்லோரும் சுயநலத்தோட தான் மத்தவங்க கிட்ட பழகனும்னு நினைக்கிறாங்க.. அடுத்தவங்க கஷ்டத்துல இவங்களுக்கு ஒரு சந்தோசத்த எதிர்பார்த்து பழகுறாங்க ..ஆனா எவளோ பேர பார்த்தும் மனசு மாறாத நான் இப்போ மனச மாத்திக்கலாம்னு நினைக்கிறேன்இப்போ கூட பாருங்க உங்களுக்கு எவ்ளோவோ வேலை இருக்கும் ஆனாலும் நான் தற்கொலை பண்ணிக்க போறேன்னு தெரிஞ்சும் இவ்ளோ நேரம் வெட்டியா உக்கார்ந்து கதைகேட்டு மனசுக்குள்ள சந்தோஷபடுறிங்க பாருங்க. உங்கள மாதிரி ஜென்மம் எல்லாம் உயிரோட இருக்கும் போது நான் ஏன் சாகனும். நான் வாழனும்.. வாழ்வேன்.
மரண சிந்தனை!!!!
மனமே மனமே பாவம் செய்வதேன்மரணத்தை மறந்தே மமதைகொள்வதேன்மரணசிந்தனை நினைவில் வரலையா!இல்லைமரணமென்பதே உனக்கு இல்லையா!
பூமியில் இறைவன் படைத்த அனைத்துமேபுனிதமனிதனே உனக்காவே! -இங்குசிறிதுகாலம் நீ இளைப்பாறவே!-இதில்பொழுதுபோக்குகள் நிறைந்து கிடக்குதுபுண்ணியங்களும் குவிந்து இருக்குது
புண்ணிய வழியை புறந்தள்ளிவிட்டுபாவத்தின் பக்கம் மனது போவதேன்பாதை மாறியே பயணம் செய்வதேன்உலகவாழ்க்கையில் உன்னைத்தொலைத்ததேன்உண்மையை உதறி உள்ளம் அலைவதேன்
கூடிக்கூடியே கோள்சொல்கிறாய்குடும்பத்தைப்பிரிக்க புறஞ்சொல்கிறாய்கூத்து கும்மாளாம் தேடிப்போகிறாய்கூட்டுக்கொள்ளையில் பங்குகொள்கிறாய்
மண்ணிலும் பொன்னிலும் மயக்கங்கொள்கிறாய்மதுவிலும் மாதுவிலும் மனதைத்தொலைகிறாய்மதப்போர்வையில் தன்னை ஒளிந்துகொண்டுமனிதனைக்கொன்று மனிதம் கொல்கிறாய்
ஃபேஷன் ஃபேஷனென வேசமிடுகிறாய்பெருமைப்பேசியே பொழுதைக்கழிக்கிறாய்
வர தட்சனையை வாங்கிகொள்கிறாய் வறுமையுடையோரை வதைசெய்கிறாய்வட்டிக்கு வட்டி வாங்கிகுவிக்கிறாய்வரம்புமீறியே வாழநினைக்கிறாய்
இப்படி,,,,,,,,,,
பாவத்தின் பக்கம் மனதுபோவதேன்புண்ணிய வழியை மறந்துபோனதேன்மரணசிந்தனை மனதில் வரலையா இல்லைமரணமென்பதே நினைவில் இல்லையா.
இம்மையில் வாழ்வே சிலகாலம்தான்உண்மையில் வாழ்க்கைமறுமையில்தான் -இதைமனதில் கொண்டுயிங்கு வாழ்க்கை நடத்திடு மரணித்தப் பிறகுமறுமையில் ஜெயித்திடு....
திங்கள், 7 ஜூன், 2010
வறுமையின் பிடியில் மீண்டும் ஒரு காதல் !!!
உன்
திறந்த இதயத்தில் உந்தன் அனுமதி இன்றி
என் காதலை பூட்டியவள் நான்தான் .
உன் நினைவுகளின் வெப்பத்தில்
குளிர் காய்கிறேன் என்று
நடுக்கத்துடன் சொன்னவளும் நான்தான் .
திறந்த இதயத்தில் உந்தன் அனுமதி இன்றி
என் காதலை பூட்டியவள் நான்தான் .
உன் நினைவுகளின் வெப்பத்தில்
குளிர் காய்கிறேன் என்று
நடுக்கத்துடன் சொன்னவளும் நான்தான் .
நீ
பார்க்கும்போது உன் விழிகளுக்கு காட்சிகளாய்
நான் இருப்பேன் என்றேன் .
நீ பேசும்பொழுது உனது வாக்கியத்திற்கு வார்த்தைகள்
நான் தொடுப்பேன் என்றேன் .
உன் நிஜவிரல் பிடிக்கும் வரை
தினம் உன் நினைவுகளின் விரல் பிடித்து
நடப்பேன் என்றேன்.
இரவினில் உன் இமைகள் மூட மறுக்கும்
நேரத்தில் எல்லாம் என் நினைவுகள்
உன்னை தாலாட்டும் என்றேன் .
நமது திருமணத்தில் வானம் இசை அமைக்க
இடிகள் இசைக்கருவிகளாகும் என்று
சொன்னவளும் நான்தான்,
மேகங்கள் அட்சதை தூவ
நட்சத்திரங்கள் மலர்களாகும் என்று
சொன்னவளும் நான்தான் ,
பார்க்கும்போது உன் விழிகளுக்கு காட்சிகளாய்
நான் இருப்பேன் என்றேன் .
நீ பேசும்பொழுது உனது வாக்கியத்திற்கு வார்த்தைகள்
நான் தொடுப்பேன் என்றேன் .
உன் நிஜவிரல் பிடிக்கும் வரை
தினம் உன் நினைவுகளின் விரல் பிடித்து
நடப்பேன் என்றேன்.
இரவினில் உன் இமைகள் மூட மறுக்கும்
நேரத்தில் எல்லாம் என் நினைவுகள்
உன்னை தாலாட்டும் என்றேன் .
நமது திருமணத்தில் வானம் இசை அமைக்க
இடிகள் இசைக்கருவிகளாகும் என்று
சொன்னவளும் நான்தான்,
மேகங்கள் அட்சதை தூவ
நட்சத்திரங்கள் மலர்களாகும் என்று
சொன்னவளும் நான்தான் ,
நம் காதல் பொய்த்தால் கடல் நீர் வற்றிப்போகும் ,
மழைத்துளி அமிலமாகும் ,
ஒற்றைத் தீக்குச்சியில்
இந்த உடல் உனக்குமுன்
உடன் கட்டை ஏறும் என்று
சொன்னவளும் நான்தான் .
நம்மை பிரிக்க நேர்ந்தால் இருவரையும் ஒன்றாய்
சிக்கன சிலுவையில்
அறைந்துக் கொல்லட்டும் என்றேன் .
உன்னை பிரிந்து சுவாசிக்க மாட்டேன்.
ஒருவேளை பிரிய நேர்ந்தால்
இந்த சுவாசமே வேண்டாம் என்றேன்
இவை அனைத்தையும் உச்சரித்த
இதே உதடுகளால்தான்
இன்று உன் இதயத்தை தொலைக்கப் போகும்
இந்த வார்த்தை ஈட்டிகளையும் வீசுகிறது .
மழைத்துளி அமிலமாகும் ,
ஒற்றைத் தீக்குச்சியில்
இந்த உடல் உனக்குமுன்
உடன் கட்டை ஏறும் என்று
சொன்னவளும் நான்தான் .
நம்மை பிரிக்க நேர்ந்தால் இருவரையும் ஒன்றாய்
சிக்கன சிலுவையில்
அறைந்துக் கொல்லட்டும் என்றேன் .
உன்னை பிரிந்து சுவாசிக்க மாட்டேன்.
ஒருவேளை பிரிய நேர்ந்தால்
இந்த சுவாசமே வேண்டாம் என்றேன்
இவை அனைத்தையும் உச்சரித்த
இதே உதடுகளால்தான்
இன்று உன் இதயத்தை தொலைக்கப் போகும்
இந்த வார்த்தை ஈட்டிகளையும் வீசுகிறது .
என் வீட்டில் அடுப்பெரிக்க
இன்று நாம் காதல் விறகாகிப்போனது .
என்னை மன்னிக்கவேண்டாம்
என்னை மறந்து விடுங்கள் !
உன்னை நேசித்தது நிஜம் !
தினம் உன் நினைவுகளிலே
சுவாசித்தது நிஜம் !
காதலில் இணைவது போன்ற
கதைகள் கேட்ட நான்
ஏனோ பிரிவது போன்ற கதைகள்
கேட்க மறந்துவிட்டேன்
இன்று நாம் காதல் விறகாகிப்போனது .
என்னை மன்னிக்கவேண்டாம்
என்னை மறந்து விடுங்கள் !
உன்னை நேசித்தது நிஜம் !
தினம் உன் நினைவுகளிலே
சுவாசித்தது நிஜம் !
காதலில் இணைவது போன்ற
கதைகள் கேட்ட நான்
ஏனோ பிரிவது போன்ற கதைகள்
கேட்க மறந்துவிட்டேன்
காதல் செய்வதற்க்கு நாம் இருவர் போதும் என்றேன்
இன்றுதான் அது இந்தியக் காதலில்
கண் மூடி சொல்லும் பொய் என்று உணர்ந்தேன் .
காதலுக்கு கட்டுத்தரிக்கூட கிடையாது
ஆனால்
கல்யாணத்திற்கு கட்டுத்தரி மட்டும் அல்ல
கடிவாளமும் சேர்ந்து வந்துவிடுகிறது .
பறப்பதற்கு கற்றுத் தந்தாய் என் காதலா .
என் சிறகுகளில் கடிவாளம்
இறுக்கப்பட்டு இருப்பதை யார் அறிவாரோ !
இன்றுதான் அது இந்தியக் காதலில்
கண் மூடி சொல்லும் பொய் என்று உணர்ந்தேன் .
காதலுக்கு கட்டுத்தரிக்கூட கிடையாது
ஆனால்
கல்யாணத்திற்கு கட்டுத்தரி மட்டும் அல்ல
கடிவாளமும் சேர்ந்து வந்துவிடுகிறது .
பறப்பதற்கு கற்றுத் தந்தாய் என் காதலா .
என் சிறகுகளில் கடிவாளம்
இறுக்கப்பட்டு இருப்பதை யார் அறிவாரோ !
குழந்தைகளின் பசியைவிட
சாராயதின் ருசியை அதிகம் அறிந்த
என் தந்தை !
ரேசன் கடையில் தந்த சேலையின்
இளமை தொலைந்தும் இன்னும்
கிழிந்த போத்தலை தைத்து
மானம் காக்க போராடும் என் தாய் !
தான் பூப்பெய்த செய்திகூட தெரியாது
ஆவேசமாய் அடுப்பூதும் என் தங்கை!
ஓசியில் பக்கத்து வீட்டில் கருப்பு வெள்ளைப்படம்
பார்த்த கனவுகளை என் வீட்டிலும்
நிஜமாக்கத் துடிக்கும் என் தம்பி !
இத்தனை பேருக்கும் மொத்தமாய் மாதம்,
மாதம் செயற்கை சுவாசம் கொடுக்கும்
ஆக்சிஜன் குடுவையாய் நான் மட்டும்.
சாராயதின் ருசியை அதிகம் அறிந்த
என் தந்தை !
ரேசன் கடையில் தந்த சேலையின்
இளமை தொலைந்தும் இன்னும்
கிழிந்த போத்தலை தைத்து
மானம் காக்க போராடும் என் தாய் !
தான் பூப்பெய்த செய்திகூட தெரியாது
ஆவேசமாய் அடுப்பூதும் என் தங்கை!
ஓசியில் பக்கத்து வீட்டில் கருப்பு வெள்ளைப்படம்
பார்த்த கனவுகளை என் வீட்டிலும்
நிஜமாக்கத் துடிக்கும் என் தம்பி !
இத்தனை பேருக்கும் மொத்தமாய் மாதம்,
மாதம் செயற்கை சுவாசம் கொடுக்கும்
ஆக்சிஜன் குடுவையாய் நான் மட்டும்.
இத்தனை கடிவாளங்களின் ஒரு முனை என் கழுத்திலும்
மறுமுனை அவர்களின் கழுத்திலும்
சுருக்குக் கயிராய் பிணைக்கப்பட்டுள்ளது .
எப்படி ஓடிவருவேன் காதலா ?
இத்தனை உயிர்களை கொன்ற
கொலைகாரி என்றப் பட்டத்துடன்
உன் மனைவியாக !
உன்னை காதலித்து ஏமாற்றியவளாக
இருந்துவிட்டுப் போகிறேன் இந்த
ஜென்மத்தில் மட்டும் மன்னித்துவிடுங்கள்,
உங்கள் நினைவுகளை
மறக்க முடியாத இவளை மறந்துவிடுங்கள்........
மறுமுனை அவர்களின் கழுத்திலும்
சுருக்குக் கயிராய் பிணைக்கப்பட்டுள்ளது .
எப்படி ஓடிவருவேன் காதலா ?
இத்தனை உயிர்களை கொன்ற
கொலைகாரி என்றப் பட்டத்துடன்
உன் மனைவியாக !
உன்னை காதலித்து ஏமாற்றியவளாக
இருந்துவிட்டுப் போகிறேன் இந்த
ஜென்மத்தில் மட்டும் மன்னித்துவிடுங்கள்,
உங்கள் நினைவுகளை
மறக்க முடியாத இவளை மறந்துவிடுங்கள்........
எஸ்.எம்.எஸ்.கலாட்டா
1) புன்சிரிப்பை விட கண்ணீர் உண்மையானது....ஏனெனில் எவர் முன்பும் சிரித்துவிட முடியும்!ஆனால் உங்களுக்கு ஸ்பெசலானவரின் முன்பு மட்டுமே உங்களால் அழ முடியும்!!
2) 21-ம் நூற்றாண்டு LKG மாணவன்:டீச்சர்! என்னப் பத்தி என்ன நினைக்குறீங்க?டீச்சர்: வெரி ஸ்வீட் பாய்!LKG மாணவன்: மச்சான்! சொன்னேன்ல.. அவ எனக்கு ரூட் விடுராட!!
அப்பா தன் 5 வயது மகனிடம்: ஏன்டா அழற? நானும் உன்னோட பிரெண்ட் மாதிரிதான்... சொல்லு!மகன்: அது ஒன்னும் இல்ல மச்சி! இன்னும் கொஞ்சம் ஹார்லிக்ஸ் கேட்டதுக்கு உன் ஆளு என்ன அடிச்சுட்டா!
ஏன் பொண்ணுங்க அழகா இருக்காங்க?உண்மையாகவா அல்லது மேக்கப்பினாலா? ????????பையன்களுக்கு நல்ல இமேஜிநேசன்ஸ் இருப்பதால்!
6) கண்டக்டர்: பஸ்சுக்குள்ள வாப்பா! அதான் கடல் மாதிரி இடம் இருக்கே!ஸ்டுடன்ட்: எனக்கு நீச்சல் தெரியாது! அதான் கரையிலேயே இருக்கேன்!
7) அய்யாச்சாமி: "I am going" ன்னா என்னடா அர்த்தம்?நண்பன்: நான் போறேன்!அய்யாச்சாமி: ஹே! ப்ளீஸ்.... மீனிங் சொல்லிட்டு போடா!
8) ப்ரொபசர்: படிக்குற பிள்ளைங்க ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தூங்கினா போதும்!ஸ்டுடன்ட்: அது எப்படி சார் முடியும்? ஒரு நாளைக்கு 5 மணி நேரம்தானே காலேஜ்!
9) அதிர்ச்சியான தகவல், எல்லா செய்தி சேனல்களையும் பாருங்க!ஒரு இறந்த பெண்ணின் உடலை நிலவில் நாசா கண்டுப்பிடித்துருக்கிறது... பல நூற்றாண்டுக்கு முந்தைய உடலாம் அது! எல்லோரும் குழப்பத்தில் உள்ளனர்! அது யாராக இருக்கும்? ???????அது வேற யாரும் இல்ல! நிலாவில் வடை சுட்டுட்டு இருந்த பாட்டியின் உடலாம் அது!எனக்கு ரொம்ப மூட் அவுட்! வடை போச்சே!
10) ஒருத்தர் கோவிலுக்கு சென்று தன் செருப்பை கழட்டி விடும் இடத்தில் "செருப்பை திருட நினைக்க வேண்டாம் -- பாக்சிங் சாம்பியன் " என்று நோட்டீஸ் வைத்து விட்டு உள்ளே சென்றார்!சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்து தன் செருப்பை வைத்த இடத்தில் உள்ள பதில் நோட்டீசைப் பார்த்துஅதிர்ச்சி அடைந்தார். அது என்னவெனில் "என்னைப் பிடிக்க முயல வேண்டாம் -- அதெலடிக் சாம்பியன்".
11) பித்யானந்தாவின் வழக்கறிஞர் வண்டு முருகன்: நான் சுத்தி வளச்சு பேச விரும்பல! ..... பலா நிதி மாரனப் பார்த்து கேக்குறேன்! பன் டி.வீ நடத்துறியா? இல்ல F டி.வீ நடத்துறியா? என்னய்யா தப்பு பண்ணுனான் என் கட்சிக்காரன்? எதோ ஒரு ஆசையிலபஞ்சிதாவ ரூமுக்கு தள்ளிட்டுப் போயிருக்கான்!.... சரின்னு விட வேண்டியதுதானே!...அத விட்டுட்டு கேமராவுல ஷூட் பண்ணி இருக்க!.... அத நீ மட்டும் போட்டுப் பாக்க வேண்டியதுதானே!.... அதான்யா உலக வழக்கம்!...அத விட்டுட்டு ஊருக்கே போட்டு காட்டிருக்க நீ!..... போட்டு காட்ட அது என்ன குடும்ப படமா?.........நீதிபதி: மிஸ்டர் வண்டு முருகன்! கோர்ட்ல இப்படி ஆவேசப் படக் கூடாது!வண்டு முருகன்: கடுப்பேத்துறாங்க மை லார்ட்!!
எஸ்.எம்.எஸ்.கலாட்டா
1) லெக்சுரர்: சன் பஸ்ட் வருமா? இல்ல மூன் பஸ்ட் வருமா?ஸ்டுடன்ட்: கண்டிப்பா மூன் தான் பஸ்ட் வரும் சார்!லெக்சுரர்: எப்படி சொல்ற? ஸ்டுடன்ட்: ஆமாம் சார்.. ஹனி மூன் வந்த பிறகுதான் சன் வரும் சார்!!
2) நம்ம அய்யாச்சாமி சின்சியர் டிராபிக் போலீஸ் தான்! இருந்தாலும் அவரை சஸ்பென்ட் செய்து விட்டார்கள்...ஏன்?பின்ன... ஓவர் ஸ்பீட்ன்னு சொல்லி ஆம்புலன்ஸ்'ஐ நிறுத்தி பைன் போட்டா சஸ்பென்ட் செய்ய மாட்டார்களா?
3) காலேஜ் கேர்ள்: டாடி! நான் காலேஜ் போயிட்டு வரேன்!அப்பா: என்னம்மா ஸ்கூல் போயிட்டு இருந்தப்பல்லாம் "அப்பா"ன்னு கூப்பிடுவா! இப்படாடின்னு கூப்பிடுற?காலேஜ் கேர்ள்:அய்யோ! "அப்பா"ன்னு கூப்பிட்டா லிப்ஸ்டிக் அழிஞ்சிடும்!
4) உன் வாழ்க்கை இருட்டா இருந்தால் கடவுளிடம் பிரார்த்தனை செய்!அப்படியும் இருட்டா இருந்தா........சான்சே இல்ல! கரண்ட் பில்லை கட்டனும்'மா! ..........
5) சிங்கத்த போட்டோல பார்த்துருப்ப!TV'ல பார்த்துருப்ப! ஏன் கார்டூன்ல கூட பார்த்துருப்ப!ஆனா தனியா நின்னு இப்படி மெசேஜ் அனுப்பி பார்த்துருக்கியா?...இப்ப பாத்துக்க!.............
6) இடி மின்னல்புயல்மழைவெள்ளம்பூகம்பம்எது நடந்தாலும்ஈஸ்ட்வெஸ்ட்நார்த்சவுத்எங்க இருந்தாலும்ஏர்டெல்பீ எஸ் என் எல் ஏர்செல் வோடாபோன்வெர்ஜின் ரிலையன்ஸ் எந்த சிம் போட்டு இருந்தாலும்காலைமதியம்மாலைஇரவுஎந்நேரம் ஆனாலும்நோக்கியாமோடோரோலாசாம்சங் சோனிஎல் ஜி எந்த மொபைல் வச்சுருந்தாலும் சென்னை கோவைமதுரைசேலம்நெல்லைதிருச்சிஇந்தியாவில்எந்த மூலையில் இருந்தாலும்என்னோட எஸ் எம் எஸ்சும்மா கில்லி மாதிரிவந்து சொல்லும்"இன்னைக்காவது பல்லை வெளக்கிட்டு சாப்பிடு"ன்னு!!
7) உலகத்தில் உள்ள 60% பசங்களுக்கு லவர் இருக்கு!
30% பசங்களுக்கு கேர்ள் பிரண்ட் இருக்கு!!
மீதி இருக்கும் 10% பசங்களுக்கு அறிவு இருக்கு!!!
30% பசங்களுக்கு கேர்ள் பிரண்ட் இருக்கு!!
மீதி இருக்கும் 10% பசங்களுக்கு அறிவு இருக்கு!!!
8) ஹைக்கூ:-
நான் உதட்டோடு உதடாககொடுத்தஒரே முத்தத்தில்கர்ப்பம் ஆனது"பலூன்"!எப்பூடி?!?
9) நம்மைஅதிகமாகசிரிக்க வைப்பதும்அதிகமாகஅழ வைப்பதும்நாம்அதிகமாகநேசிக்கும்ஒருவர் மட்டும்தான்!
10) வாழ்க்கைஒருபட்டம் பூச்சி மாதிரி!லேசா பிடிச்சாபறந்திடும்!இறுக்கிப் பிடிச்சாஇறந்திடும்!அதனால் வாழ்க்கையில் கவனமா இருங்க!...
11) உங்க வாழ்க்கையில் வெற்றி பெறநீங்க இரண்டு விஷயங்களை தவிர்க்கணும்!முதலாவது "மற்றவர்களோடு உங்களை ஒப்பிடுவதை"! இரண்டாவது "மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை"!!
12) வாழ்க்கை சில சமயங்களில் உங்களை எதிர்பாராத திருப்பங்களில் அழைத்து செல்லும்!அப்படி பயணம் செய்ய பயப்பட வேண்டாம்! என்றாவது ஒருநாள் அது தொட முடியாத உயரங்களில் உங்களை உட்கார வைக்கலாம்!!
ஞாயிறு, 6 ஜூன், 2010
கவசம்
வானவில் உணர்வுகள்
உன்னால்தானடா மெய் மறந்தேன் என்றாய்பறந்தேன்ஹைட்ரஜனும் நைட்ரஜனும் புரியவில்லைஎன் ஆக்சிஜன் நீ என்றாய்குளிர்ந்தேன்ஒரு செல் உயிரியாம் அமீபாநாமோ ஈருடலில் ஓருயிர் என்றாய்நெகிழ்ந்தேன்மல்லி படர வேண்டுமாம் பந்தல்நீ படர நான் பந்தல் என்றாய்பரவசமானேன்பூமிக்கு துணையாய் நிலாஉன் வாழ்க்கை துணையாய் நான் என்றாய்வலுவானேன்ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என்றாய்கனவு பெருங்கடலில்முழ்கினேன்மணப்பந்தல் என்றதும் என் குடியில் பிறந்தஇவரே என்னவர் என்றாய்நடை பிணமானேன்.
காதல் போதை
மூன்று காதல் கவிதைகள்
பெண்ணே உன் அதிஷ்டம்
நான் உன்னை காதலிப்பதுஎன் இஷ்டம் !என் காதலை எற்றுக்கொண்டால்உனக்கு இல்லை நஷ்டம் !காதலை ஏன் ஏற்றுக்கொள்ளஉனக்கு கஷ்டம் ?என்னை நீ மறுத்தால் அதுஉன்னுடைய துரதிஷ்டம் !எந்த பெண்ணுக்கு உள்ளதோ ...என்னை மணக்கும் பேரதிஷ்டம் !
கவிதை
அவளைநான் காதலித்தப் போதுஎன் விரல் நுணிகள் கூடக் கவிதை எழுதும் !என் பேனாமுனைக்கூட அவளைப்பாடும் !தமிழ் எழுத்துக்கள் எனக்கு தோழியாகும் !ஒவ்வொரு வாக்கியமும்காவியம் படைக்கும் !அவள் என்னை காதலித்த போதுகவிதை எழுத மறந்து போக......பேனாவில் மையிருந்தும் எழுத தயங்க.....வார்த்தைகள் தெரியாமல் தமிழை மறக்க......மௌனமே மொழியாய் மாறி விட ......இதற்குக் காரணம் மட்டும்கவிதையாய் வந்தது !கவிதையே என்னைகாதலிக்கும் போதுகவிதை எழுதவார்த்தைகள் வேண்டுமா என்றது?காற்றில் வந்த என்கவி ( தேவ ) தையின் வாசகங்கள் !இதை விட சிறந்த கவிதை இல்லை என்றது கவிதையின் வர்தகங்கள் !
எதுவாய்?
தருகின்ற பொருளா காதல் ?
உறவு
மகளாய் தங்கையாய் அக்காவாய் அண்ணியாய் தாயாய் எப்படியாகவும் இரு ஆனால் எனக்கு மனைவியாக மட்டுமில்லாமல்என்றென்றும் காதலியாகவும் இரு.
பரிசு
ஒரே பரிசை இருவரும் கொடுத்து பெற எவ்வாறு முடியும்என்ற வினாவிற்குவிடையாக வந்தது நம் குழந்தை.
காதல்
கடலளவு இருந்த நம் காதல் கடல் கடந்து போனதும் காற்றளவாகி போனது.
விதி
ஆழம் அதிமாக அழுத்தம் அதிகமாகும் தூரம் அதிமாககாதல் அதிகமாகும்.
பஞ்ச்
கண்ணே இவை அனைத்தும் சேம்பிள் பீஸ் தான் நீ மட்டுமே வாசிக்கும்மாஸ்டர் பீஸ் என் மனதில் ஒளிந்து கிடக்கிறது மொழியற்று.
அர்த்தம்.
மூன்றெழுத்து கவிதை"காதல்"அதன் ஓரெழுத்து அர்த்தம்"நீ"
மகளாய் தங்கையாய் அக்காவாய் அண்ணியாய் தாயாய் எப்படியாகவும் இரு ஆனால் எனக்கு மனைவியாக மட்டுமில்லாமல்என்றென்றும் காதலியாகவும் இரு.
பரிசு
ஒரே பரிசை இருவரும் கொடுத்து பெற எவ்வாறு முடியும்என்ற வினாவிற்குவிடையாக வந்தது நம் குழந்தை.
காதல்
கடலளவு இருந்த நம் காதல் கடல் கடந்து போனதும் காற்றளவாகி போனது.
விதி
ஆழம் அதிமாக அழுத்தம் அதிகமாகும் தூரம் அதிமாககாதல் அதிகமாகும்.
பஞ்ச்
கண்ணே இவை அனைத்தும் சேம்பிள் பீஸ் தான் நீ மட்டுமே வாசிக்கும்மாஸ்டர் பீஸ் என் மனதில் ஒளிந்து கிடக்கிறது மொழியற்று.
அர்த்தம்.
மூன்றெழுத்து கவிதை"காதல்"அதன் ஓரெழுத்து அர்த்தம்"நீ"
வெளிநாடுவாசியின் லீவு நாட்கள்.
கத்தை கத்தையாகபணம் அழித்தவன்கையில் எஞ்சி இருக்கும்சில்லறை காசுகளின்முக்கியத்துவத்தைபெற்று விடுகின்றனஊர் வந்தவனின்இறுதி விடுமுறை நாட்கள்.
காதலாகி கண்ணீர் பெருக்கி...
கட்டி வைத்தகாதலெல்லாம் கரையேறநினைக்கையில்'மறவாமல் வந்துவிடு'அழைப்பிதழோடுஅழகாய் சிரிக்கிறாய் நீ!கையசைத்துவிடைபெறுகிறாய் - நீவிட்டுப் பிரியும்வருத்ததில் கல்லெனசமைகிறேன் நான்!இதழ் பிரியாமல்புன்னகைக்கிறேன்! - நீபிரிவதை தடுக்கஇயலாமல்....இமைகளும் சேரமறுக்கின்றனநம் பிரிவின் வலிகனவுகளால்புதிப்பிக்கப்படுமெனும்பயத்தில்..சொல்ல நினைத்துசொல்லாமல் விட்டசொல்லெல்லாம்இப்போது சபிக்கப்பட்டவைஎன் அகராதியில்...எனக்கென படைக்கப்பட்ட நீபிறர்கென மாறுகையில்கடவுளின் அரசியல்கண்கூடாய் தெரிகிறது!இருந்தும்,இயலாமையெல்லாம்இரவுக்குள் இளகிகண்ணீராய் தலையணைநனைக்கையில் புரிகிறதுகாதலின் வலி!!நீ வாழ்ந்து போனஎன் நேற்றைய நாட்கள்இனி,நம் நேசத்தின்வலியுணர்த்தும்வடுக்களாய் மட்டும்!கனவுகள் எல்லாம் கண்ணீராய் வடிந்தபின் நினைவு வந்துஉண்மை சுடுகையில்புரிகிறது!அய்யோ!அலுவலக பேரூந்துஇன்னும் அரைமணியில்!வாழ்க்கை ஓட்டத்தில்பந்தய குதிரையாய்கண்ணீரை மறந்தபடி!
காதல் மழை ஏந்திழை
வசீகரிக்கப்பட்ட வார்த்தைகளெல்லாம் வரவு வைத்திருக்கிறேன் நாட்குறிப்பில்!நீ எதிரில் நிற்கையில் மௌனம் மட்டுமே சாத்தியமாகிறது என்ன செய்ய?
குடையின் ஆதரவில் நம்மை விட்டு விட்டு அத்தனையும் நனைத்துப் போனது மழை!காதலினால் கனன்ற காமம் தீப்பிடிக்கச் சாம்பலானது நாகரீக முகமூடி!
தோட்டத்துப் பூக்கள் மழையில் குளித்தன!காய்ச்சல் வந்ததெனக்கு என் பார்வையில் அவையெல்லாம் நீயானதால்!
பளீரென்ற மின்னல் வெளிச்சத்தில்மனதில் வந்து போகிறதுன் முகம்!சபிக்கிறேன் நான் மின்னலை சற்று நீடித்தாலென்னவென்று?
உன் இதழ்களை கவனித்தவாறே உரையாடுகிறேன் இப்போதெல்லாம்!உதிர்க்கும் சொற்களில் எப்போதாவது எனக்கான காதல் உதிராதாவென்று?
நீயும் நானும் தனித்திருந்த நேரத்தில் நமக்குள் நிலவிய அசைவுகளற்ற மவுனம் சொல்லாமல் சொல்லிப் போனது நம் கண(ன)ம் பொருந்திய காதலை!
ஆழியில் வசிக்கும் சிப்பியானது வானிலிருந்து மழைத்துளியொன்றை உள்வாங்கி முத்தாக்குமாம்!நீ தந்த முத்தமும் அதுபோலவே வெட்கத்தைத் தின்று நம்முள் காதலை கருவாக்கியது!
ஏன் என்று கேட்க யாருமில்லை......!
பக்கத்து வீட்டு யூதனைகைது செய்தார்கள்நான் ஏன் என்று கேட்கவில்லைஏன் என்றால்நான் யூதனில்லை......பக்கத்து வீட்டு கம்யூனிசவாதியைகைது செய்தார்கள்நான் ஏன் என்று கேட்கவில்லைஏன் என்றால்நான் கம்யூனிசவாதியில்லை.....இறுதியில்என்னைக்கைது செய்தார்கள்ஏன் என்று கேட்க்யாருமில்லை......!
வாழ்க்கை வாழ்வதற்கே......
பிறந்து விட்டோம்
வாழ்வதற்காகவே
வந்த பாதைகள் எல்லாம்
வேதனை முற்களால்
நிரம்பியிருக்கலாம்.
வலிகள் தொடரலாம்
வழி நெடுகே..
வழியில்
இடருகள் வந்தால்
முட்டிமோதி தள்ளிவிட்டு
பயனத்தை தொடரும்
தொடரூந்து போல
தொடரலாம்
நாம் போகும்
இடத்தை நோக்கி
மனதில் உறுதியாய்.....!
கண்னீர் வரலாம்
கண்கள் உள்ள்வரை
கவலைகள் வரலாம்
காலங்கள் உள்ளவரை
கண்னீரானாலும்
கவலைகளானாலும்
நிச்சயம்
ஓர் நாள்
மறையலாம்.
நம்பிக்கையாய்
நடைபோட்டால்.....!
இப்பயனம்
எத்தனை போராட்டமானது
இவ்வழியால் போனவர்கள்
சொல்லலாம்...
போய்ச்சேர்ந்தவர்கள்
யாவரும்
இவ்வழியை கடந்தவர்களே
இவ்வலியை கடந்தவர்களே.
இரவும் பகலும்
எம்மைத்தொடர்வது போல
இன்பமும்
துன்பமும்
எம்மைத்தொடரலாம்
செல்லும் இடம் வரை.
புன்னகை
ஒளியை வீசியவாரு
துன்ப இருளை
கடந்து செல்லலாம்
மழலை மனதோடு............!
நிழலுக்காய் ஏங்கும்
பாலைவன பயனியாய்
நிம்மதிக்காய்
தவிக்கிறது எமதுள்ளங்கள்.
கிடைத்தவறறை
பெற்றுக்கொள்ளுங்கள்.
நிச்சயம் ஓர்நாள்
நிழலும் வரலாம்
நிம்மதியும் வரலாம்
பாலைவனம்
பசுமையாகவும் மாறலாம்...
வெற்றியின் சுவை
வென்றவனுக்கே தெரியும்
வாழ்க்கையின் சுவை
வாழ்ந்தவனுக்கே தெரியும்.
வழி நெடுகே தொடருங்கள்
வாழ்க்கை
வாழ்வதற்கே......!
வாழ்வதற்காகவே
வந்த பாதைகள் எல்லாம்
வேதனை முற்களால்
நிரம்பியிருக்கலாம்.
வலிகள் தொடரலாம்
வழி நெடுகே..
வழியில்
இடருகள் வந்தால்
முட்டிமோதி தள்ளிவிட்டு
பயனத்தை தொடரும்
தொடரூந்து போல
தொடரலாம்
நாம் போகும்
இடத்தை நோக்கி
மனதில் உறுதியாய்.....!
கண்னீர் வரலாம்
கண்கள் உள்ள்வரை
கவலைகள் வரலாம்
காலங்கள் உள்ளவரை
கண்னீரானாலும்
கவலைகளானாலும்
நிச்சயம்
ஓர் நாள்
மறையலாம்.
நம்பிக்கையாய்
நடைபோட்டால்.....!
இப்பயனம்
எத்தனை போராட்டமானது
இவ்வழியால் போனவர்கள்
சொல்லலாம்...
போய்ச்சேர்ந்தவர்கள்
யாவரும்
இவ்வழியை கடந்தவர்களே
இவ்வலியை கடந்தவர்களே.
இரவும் பகலும்
எம்மைத்தொடர்வது போல
இன்பமும்
துன்பமும்
எம்மைத்தொடரலாம்
செல்லும் இடம் வரை.
புன்னகை
ஒளியை வீசியவாரு
துன்ப இருளை
கடந்து செல்லலாம்
மழலை மனதோடு............!
நிழலுக்காய் ஏங்கும்
பாலைவன பயனியாய்
நிம்மதிக்காய்
தவிக்கிறது எமதுள்ளங்கள்.
கிடைத்தவறறை
பெற்றுக்கொள்ளுங்கள்.
நிச்சயம் ஓர்நாள்
நிழலும் வரலாம்
நிம்மதியும் வரலாம்
பாலைவனம்
பசுமையாகவும் மாறலாம்...
வெற்றியின் சுவை
வென்றவனுக்கே தெரியும்
வாழ்க்கையின் சுவை
வாழ்ந்தவனுக்கே தெரியும்.
வழி நெடுகே தொடருங்கள்
வாழ்க்கை
வாழ்வதற்கே......!
சும்மயிருக்க முடியாம கிறுக்கியவை....!
எல்லோரிடமும்எல்லாமும்இருக்கிறதுநல்லமனசைத்தவிர...!
ஓரே வழியாகவேபோய்வருகிறதுஇயந்திர வாழ்க்கைகடிகாரத்தைபோலவே...!
கணனிகளுக்குள்ளும்கைத்தொலைபேசிகளுக்குள்ளும்அடைப்பட்டுக்கிடக்கிறதுநம்விருந்தோம்பல்களும்நல விசாரிப்புகளும்...!
படித்தவனுக்குவேலையுமில்லைபசித்தவனுக்குஉணவுமில்லைஇதுதான்எம் தேசிய கீதமோ...!
நினைப்பவைகிடைப்பதுமில்லைகிடைப்பவைநினைப்பவையாகஇருப்பதுமில்லைஇதுதான் வாழ்கையா....!
வானம் போல்வாழ்ந்திட நினைத்தேன்இன்னும்கீழேதான்கிடக்கிறேன்பூமியாய்.....!
தேடிக்கொண்டிருக்கிறேன்இன்னும்வாத்தியாரிடம்சொன்னஎதிர்காலஇலற்சியங்களை...
ஓரே வழியாகவேபோய்வருகிறதுஇயந்திர வாழ்க்கைகடிகாரத்தைபோலவே...!
கணனிகளுக்குள்ளும்கைத்தொலைபேசிகளுக்குள்ளும்அடைப்பட்டுக்கிடக்கிறதுநம்விருந்தோம்பல்களும்நல விசாரிப்புகளும்...!
படித்தவனுக்குவேலையுமில்லைபசித்தவனுக்குஉணவுமில்லைஇதுதான்எம் தேசிய கீதமோ...!
நினைப்பவைகிடைப்பதுமில்லைகிடைப்பவைநினைப்பவையாகஇருப்பதுமில்லைஇதுதான் வாழ்கையா....!
வானம் போல்வாழ்ந்திட நினைத்தேன்இன்னும்கீழேதான்கிடக்கிறேன்பூமியாய்.....!
தேடிக்கொண்டிருக்கிறேன்இன்னும்வாத்தியாரிடம்சொன்னஎதிர்காலஇலற்சியங்களை...
படித்ததில் பிடித்த தத்துவங்கள் & நகைச்சுவைகள்
நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோஅதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.=========================வெற்றி என்பது நிரந்தரமல்ல;தோல்வி என்பது இறுதியானதுமல்ல!=========================ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.=========================நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,ஒரு நல்ல நண்பனின் மவுனம்இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.=========================நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;ஆனால் அனுபவமோதவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது. - பில் கேட்ஸ்=========================சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.அவற்றைக் கடந்து சென்றால்அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை!=========================மேலாளர்: உன் தகுதி என்ன?சர்தார்: நான் Ph.Dமேலாளர்: Ph.Dன்னா என்ன?சர்தார்: Passed high school with Difficulty.=========================நானும் சரி ஒரு ரவுண்டுதானேன்னு இன்டர்வியூக்குப் போனேன்.அங்கே 5பேரும்மா.மாத்தி மாத்தி கேள்வி கேட்டாங்க.என்னால முடிஞ்ச வரைக்கும் பதில் சொன்னேன்.திடீர்னு ஒருத்தன் HRக்கு போன் போட்டுமச்சான் ஃபிரீயா இருந்தா வாடா.ஒருத்தன் சிக்கியிருக்கான்னு சொன்னான்.சரின்னு நானும் 4ஆவது மாடிக்குப் போனேன்.அங்கே 8 பேரும்மா.அவங்களால எவ்வளவு முடியுமோஅவ்வளவு கேள்வி கேட்டாங்க.நானும் எவ்வளவு நேரம் பதில் தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது?அதுல ஒருத்தன் சொன்னான்இவன் எவ்வளவு கேள்வி கேட்டாலும் சமாளிக்கிறான்டாஇவன் ரொம்ப அறிவாளின்னு சொல்லிட்டாம்மா.=========================(தேர்வு அறையில்)ஆசிரியர்: டேய் என்னடா... கையில் ஃபார்முலா எழுதியிருக்கே?மாணவன்: எங்க கணக்கு வாத்தியார்தான் ஃபார்முலா எல்லாம் விரல் நுனியில்இருக்கணும்னு சொன்னார்.=========================விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.=========================அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க மனசு சொல்வதை மட்டும்கேளுங்கள்.ஏன்னா அறிவு......சரி விடு. இல்லாததைப் பத்திப் பேச வேண்டாம்.=========================ஒண்ணு + ஒண்ணு = ரெண்டுநீதான் எனக்கு ஃபிரெண்டு.ரெண்டு + ரெண்டு = நாலுநீ ரொம்ப வாலு.மூணு + மூணு = ஆறுநீ இல்லாம போரு.நாலு + நாலு = எட்டுஎஸ்எம்எஸ் அனுப்பலன்னா குட்டு.=========================நட்பு எனும் கலையானது, ஒரு நல்ல இசைக் கருவியை வாசிப்பது போன்றது. முதலில் விதிகளின்படி இந்தக் கருவியை வாசிக்கத் தொடங்க வேண்டும். பிறகு விதிகளை மறந்துவிட்டு இதயத்திலிருந்து வாசிக்க வேண்டும். =========================கடவுள், நகைச்சுவையுடன் எழுதக்கூடிய ஒரு சிறந்த எழுத்தாளர். ஆனால் அவர், நகைச்சுவையுடன் நடிக்கத் தெரியாத மோசமான நடிகர்கள் பலரைக் கொண்டு தன் நாடகத்தை நடத்துகிறார்.=========================30 மாநிலங்கள்1618 மொழிகள்6400 சாதிகள்6 மதங்கள்6 இனங்கள்29 பெரிய பண்டிகைகள்ஒரு நாடு!இந்தியனாக இருப்பதற்காகப் பெருமைப்படுங்கள்!=========================உயிரின் சுவாசம் மூச்சுகண்களின் சுவாசம் கனவுஇதயத்தின் சுவாசம் துடிப்புநாக்கின் சுவாசம் பேச்சுஎன் நட்பின் சுவாசம் நீ=========================எனக்கு இட்லியைப் பிடிக்காதுதோசையைத்தான் பிடிக்கும்.ஏன்னா, இட்லி கூட்டமா வேகும்.தோசை சிங்கிளாத்தான் வேகும்.கூல்... =========================உதவும் கரங்கள் ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.- அன்னை தெரஸா.=========================வெற்றி என்பது நிரந்தரமல்ல;தோல்வி என்பது இறுதியானதுமல்ல!அதனால்,வெற்றிக்குப் பிறகுதொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;தோல்விக்குப் பிறகுதொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்!=========================எல்லாம் சில காலமே - ரமண மகரிஷி=========================கண்களைத் திறந்து பார்அனைவரும் தெரிவார்கள்.கண்களை மூடிப் பார்.உனக்குப் பிடித்தவர்கள் மட்டும் தெரிவார்கள்!=========================தோல்வியின் அடையாளம் தயக்கம்!வெற்றியின் அடையாளம் துணிச்சல்!துணிந்தவர் தோற்றதில்லைதயங்கியவர் வென்றதில்லை!=========================கையில் 10 ரோஜாக்களோடுகண்ணாடி முன் நில்லுங்கள்!இப்போது நீங்கள் 11 ரோஜாக்களைக் காண்பீர்கள்!அந்த 11ஆவது ரோஜா,உங்கள் புன்னகை!நீங்ள் இப்போது புன்னைப்பதை நான் அறிவேன்!=========================வெற்றியை விரும்பும் நமக்குத் தோல்வியைத் தாங்கும் மனம் இல்லை;தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்.=========================உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?பிரச்சினைகள் வரும்போது அல்ல;பிரச்சினைகளைக் கண்டு நீங்கள்பயந்து விலகும்போது. - பாரதியார்=========================எவையெல்லாம் அழகாக இருக்கின்றனவோஎவையெல்லாம் அர்த்தத்துடன் இருக்கின்றனவோஎவையெல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமோஅவை அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கட்டும்!இன்றும் நாளையும் என்றும்.=========================இதை மெதுவாகப் படியுங்கள்:LIFEISNOWHEREஇதை எப்படிப் படித்தீர்கள்?LIFE IS NO WHERE என்றா?LIFE IS NOW HERE என்றா?நாம் பார்க்கிற விதத்தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த ஒற்றை வரிஉணர்த்திவிடுகிறது!=========================மின்தடை ஏற்படும்போதுதான்நமக்கு மெழுதுவர்த்தி ஞாபகம் வருகிறது.அப்படித்தான் பிரச்சினைகளின் போதுஒரு நண்பர், தீர்வு என்னும் விளக்கேந்தி வருகிறார்.நான் உனக்கொரு மெழுகுவர்த்தியாக இருப்பேன்என்ற நம்பிக்கை எனக்குண்டு.=========================நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!உங்கள் கண்ணீர்,உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!=========================ஒரு நாள், கடவுள் என்னைக் கேட்டார்:"இந்த நண்பர் இன்னும் எவ்வளவு காலம்உன்னுடன் இருக்க வேண்டும்?"நான் கண்ணீர் உகுத்தேன்.என் கண்ணீர்த் துளிஒரு பெருங்கடலில் விழுந்தது.நான் இப்போது கடவுளிடம் சொன்னேன்:"இந்தத் துளியை நீங்கள் கண்டுபிடிக்கும் வரை."=========================நீ மற்றவருக்கு வழிகாட்டி ஆவதற்காகப்பிறந்திருக்கிறாய்.ஏன் மற்றவர்களிடம் உன் வழிகாட்டியைத்தேடிக் கொண்டிருக்கிறாய்?இந்த உலகம்உன் வெற்றிக் கதையைப் படிக்கக்காத்துக்கொண்டிருக்கிறது.=========================பிறக்கும்போது தாயை அழவைக்கிறோம்இறக்கும்போது எல்லோரையுமே அழவைக்கிறோம்வாழும்போதாவதுஎல்லோரிடமும் சிரிக்கப் பழகுவோம்.=========================2 சொட்டு போட்டா அது போலியோ.4 சொட்டு போட்டா அது உஜாலா2880 சொட்டு போட்டா அது குவாட்டர்இதுதான் இன்னிக்கு மேட்டர்.=========================வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும்உப்பாக இருக்கலாம்.ஆனால்,அவைதான்வாழ்வை இனிமையாக மாற்றும்.=========================ஒவ்வொரு மாநிலப் பெண்களிடமும்ஒவ்வொரு சிறப்பு உண்டு.கேரளா: நீண்ட கூந்தல்.ஆந்திரா: கூரிய மூக்குமும்பை: செழுமையான கன்னங்கள்பஞ்சாப்: பளிச் என்ற நிறம்தமிழ்நாடு: ஒன்னுமே இல்லேன்னாலும் ஓவரா சீன் போடறது=========================நாம் அனைவரும் ஒரே அளவு திறமை பெற்றவர்கள் இல்லைஆனால்,நம் திறமையை வளர்த்துக்கொள்ளஒரே அளவு வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம்.- அப்துல்கலாம்.=========================ஓர் உண்மை:நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது,நீ யாரை விரும்புகிறாயோஅவரை நினைத்துக்கொள்வாய்!நீ துயரத்தில் இருக்கும்போது,உன்னை யார் விரும்புகிறாரோஅவரை நினைத்துக்கொள்வாய்!=========================ஒரு சிறிய கையசைப்பு, நம்மை அழவைக்கலாம்!ஒரு சிறிய நகைச்சுவை, நம்மைச் சிரிக்கவைக்கலாம்!ஒரு சிறிய அக்கறை, நம்மைக் காதலில் விழவைக்கலாம்!ஒரு சிறிய தொடுதல், நம் உணர்வைக் கூர்மைப்படுத்தலாம்!நானும் நம்புகிறேன்என் சிறிய குறுஞ்செய்தி,உனக்கு என்னை நினைவுபடுத்தலாம்!=========================உங்கள் இதயத்தில் மகிழ்ச்சிஉங்கள் ஆன்மாவில் புத்துணர்வுஉங்கள் வாழ்வில் வெற்றிஉங்கள் முகத்தில் புன்னகைஉங்கள் இல்லத்தில் அன்பின் நறுமணம்இவை அனைத்தும் உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்!
எமது கற்பனை கவிதைகள்!
பெண்ணே !உன் ஓரப்பார்வை அம்புகளால் தாக்கப்பட்டுகாயம்பட்ட வேடன் நான் !உன் காந்தப்பார்வை வலை வீச்சீல் மாட்டித்துடிக்கும் மீனவன் நான் !உன் நினைவுகளுடன் உருகி, உனக்காகவே வாழ்ந்து, கனவுகளுடன் காத்திருக்கும் மூடன் நான் !
பெண்ணே !மரங்களுக்கு மழைக்காலம் போல்பறவைகளுக்கு குளிர்காலம் போல்விலங்குகளுக்கு கோடை காலம் போல்உன்னை நினைக்கும் ஒவ்வொரு காலமும் என்னில் வசந்த காலம் ! ஆனாலும் நீ என்னிடம் பேசியது இறந்தகாலம் !நான் எனக்குள் பேசுவது நிகழ்காலம் !உன் நினைவுகளால் என்னாகுமோ என் எதிர்காலம் !
பெண்ணே !உன் நினைவுகளின் வரவு என்னை விட்ட நீங்காத செலவு !உன்னால் தன்னம்பிக்கையை என்னுள் கூட்டிக்கொள்கிறேன் !உனக்கு பிடிக்காததை என்னில் கழித்துக்கொள்கிறேன் !உன்னை நினைத்தே என் திறமையை பெருக்கிக்கொள்கிறேன் !உனக்காகவே என் வாழ்க்கையை வகுத்துக்கொள்கிறேன் !என்றும் உன்னை எனக்கு 100 சதவீதம் பிடித்திருப்பதால்.....!
பெண்ணே !மரங்களுக்கு மழைக்காலம் போல்பறவைகளுக்கு குளிர்காலம் போல்விலங்குகளுக்கு கோடை காலம் போல்உன்னை நினைக்கும் ஒவ்வொரு காலமும் என்னில் வசந்த காலம் ! ஆனாலும் நீ என்னிடம் பேசியது இறந்தகாலம் !நான் எனக்குள் பேசுவது நிகழ்காலம் !உன் நினைவுகளால் என்னாகுமோ என் எதிர்காலம் !
பெண்ணே !உன் நினைவுகளின் வரவு என்னை விட்ட நீங்காத செலவு !உன்னால் தன்னம்பிக்கையை என்னுள் கூட்டிக்கொள்கிறேன் !உனக்கு பிடிக்காததை என்னில் கழித்துக்கொள்கிறேன் !உன்னை நினைத்தே என் திறமையை பெருக்கிக்கொள்கிறேன் !உனக்காகவே என் வாழ்க்கையை வகுத்துக்கொள்கிறேன் !என்றும் உன்னை எனக்கு 100 சதவீதம் பிடித்திருப்பதால்.....!
நினைவலைகள்..!
பெண்ணே !உன் கனவுகளே இல்லையென்றால் என்றோ நான் கண்மு்டியிருப்பேன் !உன் நினைவுகளே இல்லையென்றால் என்றோ நான் வீழ்ந்திருப்பேன் !உன்னை காணாமல் இருந்திருந்தால் எங்கேயோ காணாமல் போயிருப்பேன் !உன் நினைவால் என் நினைவில்லை !என்றுமே என்னில் உன் நினைவலை !உன் நினைவுகள் என்னை நிழலாய் பின்தொடர்ந்தாலும் உண்மை நிலையில் என் உள்ளத்தில் உன் உருவம் என்னில் கலந்ததால் நீ இன்றி என் நிழலில்லை ! உன் நினைவின்றி நான் இல்லை !
கனவுகள்...!
நண்பர்களே ! கனவு காணுங்கள்....! என்னைப்போல் கனவுகளில் கன்னி அவளை காணாதீர்,நினைவுகளை பெருக்கிடுவாள்...! நீராய், கானல் நீராய்... மறைந்திடுவாள்..!பொய்த்தோற்றம் போட்டுடுவாள்...!பொல்லாதவனாய் உன்னை ஆக்கிடுவாள்...!ஆழ்வாராய் இருப்பவனையும்,போக்கிரியாய் மாற்றிடுவாள்...!
நட்பின் பிரிவு
நட்பு மலர்கள்” பிரிவால்
வாடினாலும் அதன் “வாசம்”
என்றும் இதயத்தில் வீசும்...!
சிறகில்லா பறவையும்,
சிறகடித்து பறப்பதென்றால்
“நட்பு” எனும் இறகுகள்
இருப்பதினால் மட்டுமே...!
பாலில் கலந்த நீரைப்போல
எம்இரத்தித்தில் கலந்தது நம் நட்பு..!
பால்நீரிலிருந்தும் பாலை மட்டும்
பிரித்திடுமாம் அன்னப்பறவை...!
எம்இரத்தத்திலிருந்து
நம்நட்பை பிரிப்பதென்றால்...
எம்உயிர் இவ்வுலகை விட்டு
பிரிந்தால் மட்டுமே...!!
வாடினாலும் அதன் “வாசம்”
என்றும் இதயத்தில் வீசும்...!
சிறகில்லா பறவையும்,
சிறகடித்து பறப்பதென்றால்
“நட்பு” எனும் இறகுகள்
இருப்பதினால் மட்டுமே...!
பாலில் கலந்த நீரைப்போல
எம்இரத்தித்தில் கலந்தது நம் நட்பு..!
பால்நீரிலிருந்தும் பாலை மட்டும்
பிரித்திடுமாம் அன்னப்பறவை...!
எம்இரத்தத்திலிருந்து
நம்நட்பை பிரிப்பதென்றால்...
எம்உயிர் இவ்வுலகை விட்டு
பிரிந்தால் மட்டுமே...!!
உன் மூடிய இமைக்குள்..!
உன் மூடிய இமைக்குள்கருவிழியாய் நான்..!தந்தங்கள் இழைத்த உன் கன்னத்தில்விழும் குழியாய் நான்..!உன் சந்திர வடிவ நெற்றியில்சூரியக் குங்குமமாய் நான்..!மூடி மறைத்த உன்மார்புகளுக்கிடையில்இறங்கும் வியர்வைத் துளிகளாய் நான்..!உன் வெண்சங்குக் கழுத்தில்பொன் மஞ்சள் நாணலாய் நான்..!கொழுத்த உன் வயிற்றினில்கொப்பூழாய் நான்..!உன் வாழைத் தண்டு கால்களில்ஒலிக்கும் கொலுசொலிகளாய் நான்..!மெல்லிய உன் கால் விரல்களில்ஒளிரும் மெட்டியாய் நான்..!இப்படி உன்னுள் அனைத்தும்நானாக விரும்புகிறேன்..!உன்னுள்ளும் உணர்ச்சிகள்உண்டென்பதை நானறிவேன்..!வாழ்க்கைக்காக நீ காத்திருந்ததுபோதும் கண்ணே..!உனக்காக ஒரு வாழ்க்கையேஇங்கு காத்திருக்கிறது..!நீ விதவையெனில் உனைநான் காதலிக்கலாகாதோ..!சகியே… சமூகம் ஒரு குப்பையடிஅது சாத்திரங்களின் நாற்றமடி..!உன் விதவைக் கோலத்தைத் துறந்திடுஉன் பழைய வாழ்வை மறந்திடுஎன் உணர்வுகளை நீயும் மதித்திடு…என்னுள் இரண்டறக் கலந்திடு..!
உன்னைப் போலவே அழகாய்த்தான்..!
என்றும் நீ என்னோடுதான்
என்னைவிட்டு நீ பிரிந்தாலும்என்றும் நீ என்னோடுதான்உன்னைப் பற்றிய நினைவுகள்எந்தன் உயிரில் கலந்த உறவுகள்உயிர் உடல் விட்டு பிரியும் வரைஉன் நினைவு என்னை விட்டு அகலாதுபசுமாடு இரையை அசைபோடும்பாவை உன் நினைவை அசைபோடும் நான்பசுமரத்து ஆணி போல பதிந்ததுபாசம் மிகுந்த உந்தன் பரவச விழிகள்கணினியில் நிற்கும் முகப்புப்படம் போலகாளை எந்தன் இதயத்தில் நிற்கும் நின் உருவம்ஒலி நாடாவில் பாடல் கேட்டு இன்புறுவது போலஉந்தன் நினைவுகளை நினைத்து இன்புறுகிறேன்வாழ்வில் நடந்த நிகழ்வுகள் ஆயிரம்வஞ்சி உன் சந்திப்பு நிகழ்வு கல்வெட்டானதுஆயிரம் மைல்களுக்கு அப்பால் நீ வாழ்ந்தாலும்அருகில் என் அருகில் நினைவில் வாழ்கிறாய்என்னைப் போல எப்போதும் நினைக்காவிட்டாலும்என்னை நீ எப்போதாவது நினைப்பாய் நிஜம்உன்னைப் பார்க்க நீ தடைவிதிக்கலாம்உன்னை நினைக்க நீ தடைவிதிக்க முடியாது.
ஷாஜகானைப் போல்..!
ஒரே ஒரு ஒற்றை வார்த்தைக்காக..!
எதற்க்கும் அடி பணியாதவன்...உன் அன்பிற்கு அடிமையானேன்..!எவற்றுக்கும் அஞ்சாதவன்...உன் பார்வைக்கு அஞ்சினேன்..!அடிதடிக்கே பழக்கப்பட்டவன்...உன் அன்பு கண்டு அண்ணலானேன்..!பகட்டாகத் திரிந்து கொண்டிருந்தவன்...உன் எளிமை கண்டு ஏழையானேன்..!என்னுள் ஏற்பட்ட இத்தனை மாற்றமும்நீ உதிர்க்கும் அந்த ஒரே ஒருஒற்றை வார்த்தைக்காக‘அன்பே எனைக் காதலி..!’
அன்புள்ள அம்மாவுக்கு
உலகில் உறவுகள் ஆயிரம் உண்டுஉன்னத அம்மாவிற்கு ஈடு உண்டோ?கருவில் சுமந்த காலம் முதல் நம்மைகண்ணின் இமையாய் காப்பவள் ஒப்பற்ற தாய்தன் தூக்கம் துறந்து என்றும் குழந்தைதன் தூக்கம் காத்து வளர்த்தவள் தாய்தாலாட்டுப் பாடி தமிழ்மொழி ஊட்டியவர் தாய்சீராட்டி வளர்த்து சிறப்படையச் செய்தவள் தாய்தன்னலம் மறந்து குழந்தை நலம் பேணுபவள் தாய்தன்னிகரில்லா தியாகத்தின் திரு உருவச் சின்னம் தாய்பசி மறந்து குழந்தை பசி போக்குபவள் தாய்ருசி அறிந்து குழந்தை புசிக்கத் தருபவள் தாய்தன்னைத் தேய்த்து வாசம் தரும் சந்தனம் தாய்தன்னை உருக்கி ஒளி தரும் மெழுகு தாய்சும்மா வந்து போகும் உறவு அல்ல தாய்அம்மா நெஞ்சில் பதிந்த கல்வெட்டு உறவு தாய்உடலில் உயிர் உள்ள வரை மறக்கமுடியாது தாய்உணர்வு ஊட்டிய உன்னத உயர்ந்த உறவு தாய்பேசாத கல்லை வணங்குவது முடநம்பிக்கைபேசும் தாயை வணங்குவது தன்னம்பிக்கைகண்ணிற்கு புலப்படாத கடவுளை வணங்குவதை விடகண்ணிற்கு புலப்படும் தாயை வணங்கு உயர்ந்திடமனைவியை மதித்திரு தவறில்லை ஆனால்அம்மாவை துதித்திடு தவறில்லை சரியே
காதல் கவிதை
உன்னை தூங்க வைக்க என் இமையை விசிறியாக விசுவேன் ..உன் இதழுக்கு வண்ணம் பூச,வானவில்லை விலை கொடுத்து வாங்குவேன் ..உன்னை குளுபாட்ட கடல் அலையை, மட்டும் கடன் வாங்கி,மழை துளி, மண்ணில் விழும் முன், அலையாக உன் மேனியில் மோத செய்வேன்..நீ சுவாசித்த காற்றை சேகரித்து,பட்டு போன மரத்திற்கு உயிர் கொடுப்பேன்..நீ வெட்டி எறிந்த நகத்தை சேகரித்து,உனக்கு தற்காப்பு ஆயுதமாக உருவாக்குவேன்...குயிலின் குரலை மட்டும் கடன் வாங்கி,உன் தொண்டைக்குளிக்குள் அடைதுவைபேன்...உன் கூந்தலில் ஒரு முடி உதிர்த்து மண்ணில் விழுந்தாலும்,விழுந்த இடத்தில ரோஜா செடி நடுவேன்...
காதல் கவிதை
உன் ஒரு புன்னகை போதும்,புவி வெப்பமடைவதை தடுத்துவிடலாம்...
"லைலா" புயலாக என்னை தாக்கினாய்,உன் தாக்குதலில் " மஜ்சுனுவாக" நான் நிலை குலைந்து தான் போனேன்...
நீ என்னோடு இருந்தால்,என் இதயத்திற்குள் உன்னை "திடமாக" ஒளித்து கொள்வேன்...
நீ என்னை பிரிந்தால்,
"திரவமாக" என் கண்களில் கண்ணீராக வழிவாய்..............
என்னை வேண்டாம் என்று நீ சொன்னால்,காற்றில் "வாயுவாக" கலந்து விண்ணை நோக்கி சென்றுவிடுவேன் ....
"லைலா" புயலாக என்னை தாக்கினாய்,உன் தாக்குதலில் " மஜ்சுனுவாக" நான் நிலை குலைந்து தான் போனேன்...
நீ என்னோடு இருந்தால்,என் இதயத்திற்குள் உன்னை "திடமாக" ஒளித்து கொள்வேன்...
நீ என்னை பிரிந்தால்,
"திரவமாக" என் கண்களில் கண்ணீராக வழிவாய்..............
என்னை வேண்டாம் என்று நீ சொன்னால்,காற்றில் "வாயுவாக" கலந்து விண்ணை நோக்கி சென்றுவிடுவேன் ....
அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!
அதோ பார்; எல்லோரும் நடந்து
செல்கிறார்கள்,
நான் மட்டுமே
நீயின்றி இறந்து செல்கிறேன்!
உலகம் கைகாட்டிய
ஆயிரம் காரனங்களுக்கிடையே நீ
பிரிந்து விட்டாய் -
உனை மறக்க இயலாத ஒற்றை காரணத்தால்
நினைத்து நினைத்துருகி -
நாணற்றுப் போகிறேன் நான்!
உனக்கொன்று தெரியுமா..
உனக்காக நான் சிந்தாதக் கண்ணீரெடுத்து
உலகத்தையே நனைத்துவிடலாம்;
உனக்காகக கனக்கும் இதயத்தில்
மலைகனமும் தாங்கிக் கொள்ளலாம்!
உனை உச்சரிக்காத பொழுதுகளை
மரணத்தை நோக்கிய பயனமெனலாம்;
நீயில்லாத வாழ்க்கையை – நான்
இறந்தும் -
வாழ விதித்த; விதி எனலாம்!
உன்னை காணாத பொழுதை
குருட்டு நகர்வெனலாம்;
உனை பிரிந்த தவிப்பை சொல்ல
வார்த்தையின்றி -
மௌன சோகம் கொள்ளலாம்!
உன்னிடம் பேசாத ஒரு வார்த்தையை
எனக்குக் கிடைக்காத நிம்மதி எனலாம்;
உன்னிடம் பேசி பேசி தீர்த்ததில்
இன்னும் ஏழு ஜென்மம் இருப்பினும் -
உனை நினைத்தே கடந்துப் போகலாம்!
உனை சந்திக்காத நாட்களை
நான் வாங்காத சிரிப்பெனலாம்;
நீயின்றி வாழும் நிலையை
என் பாவத்தின் சம்பளமென்று கொள்ளலாம்!
நீ அழைக்காத என் பெயரை
யாரும் அழைக்காத தனிமையிலிருந்து மாய்த்துவிடலாம்;
உன் குரல் கேட்டு விழிக்காத பொழுதை
நான் வாழாத நாட்களென்று -
நாளேட்டில் குறித்துக் கொள்ளலாம்!
நீயின்றி நீயின்றி அழும்
அழைக்கெல்லாம் எவர் வந்து
என்னை சமாதானம் செய்வார் -
நான் அழுது அழுது ஒழிந்த பின்
வேண்டுமெனில் -
உன் நினைவால் பயித்தியமானேனென்பார்!
உன் இதய குருதி கொண்டு
என் நினைவை அழித்துக் கொள்; பெண்ணே
நீயில்லாத வாழ்வை -
நானும் வாழப் போவதில்லை;
இறந்தேன் என்றே எண்ணிக் கொள்ளடிப் பெண்ணே!!
செல்கிறார்கள்,
நான் மட்டுமே
நீயின்றி இறந்து செல்கிறேன்!
உலகம் கைகாட்டிய
ஆயிரம் காரனங்களுக்கிடையே நீ
பிரிந்து விட்டாய் -
உனை மறக்க இயலாத ஒற்றை காரணத்தால்
நினைத்து நினைத்துருகி -
நாணற்றுப் போகிறேன் நான்!
உனக்கொன்று தெரியுமா..
உனக்காக நான் சிந்தாதக் கண்ணீரெடுத்து
உலகத்தையே நனைத்துவிடலாம்;
உனக்காகக கனக்கும் இதயத்தில்
மலைகனமும் தாங்கிக் கொள்ளலாம்!
உனை உச்சரிக்காத பொழுதுகளை
மரணத்தை நோக்கிய பயனமெனலாம்;
நீயில்லாத வாழ்க்கையை – நான்
இறந்தும் -
வாழ விதித்த; விதி எனலாம்!
உன்னை காணாத பொழுதை
குருட்டு நகர்வெனலாம்;
உனை பிரிந்த தவிப்பை சொல்ல
வார்த்தையின்றி -
மௌன சோகம் கொள்ளலாம்!
உன்னிடம் பேசாத ஒரு வார்த்தையை
எனக்குக் கிடைக்காத நிம்மதி எனலாம்;
உன்னிடம் பேசி பேசி தீர்த்ததில்
இன்னும் ஏழு ஜென்மம் இருப்பினும் -
உனை நினைத்தே கடந்துப் போகலாம்!
உனை சந்திக்காத நாட்களை
நான் வாங்காத சிரிப்பெனலாம்;
நீயின்றி வாழும் நிலையை
என் பாவத்தின் சம்பளமென்று கொள்ளலாம்!
நீ அழைக்காத என் பெயரை
யாரும் அழைக்காத தனிமையிலிருந்து மாய்த்துவிடலாம்;
உன் குரல் கேட்டு விழிக்காத பொழுதை
நான் வாழாத நாட்களென்று -
நாளேட்டில் குறித்துக் கொள்ளலாம்!
நீயின்றி நீயின்றி அழும்
அழைக்கெல்லாம் எவர் வந்து
என்னை சமாதானம் செய்வார் -
நான் அழுது அழுது ஒழிந்த பின்
வேண்டுமெனில் -
உன் நினைவால் பயித்தியமானேனென்பார்!
உன் இதய குருதி கொண்டு
என் நினைவை அழித்துக் கொள்; பெண்ணே
நீயில்லாத வாழ்வை -
நானும் வாழப் போவதில்லை;
இறந்தேன் என்றே எண்ணிக் கொள்ளடிப் பெண்ணே!!
படித்த சில 'கடி'கள்
'ஏங்க நமக்கு கல்யாணம் செஞ்சு வெச்ச புரோக்கர் செத்துப்போயிட்டாராம்'
'செஞ்ச பாவம் சும்மா விடுமா'
'செஞ்ச பாவம் சும்மா விடுமா'
'தலைவர் ரொம்ப கோபமா இருக்காரே ஏன்?'
'கடைத் திறப்பு விழான்னு கூட்டிக்கிட்டுப் போய் 'சாக்கடை'யை திறக்க வெச்சுட்டாங்களாம்'
'கடைத் திறப்பு விழான்னு கூட்டிக்கிட்டுப் போய் 'சாக்கடை'யை திறக்க வெச்சுட்டாங்களாம்'
'நேத்து நீங்க வைர நெக்லேஸ் வாங்கி தர்ற மாதிரி கனவு கண்டேங்க..!'
'இன்னிக்கு வாங்கி போட்ட மாதிரி கனவு கண்டுறு'
'இன்னிக்கு வாங்கி போட்ட மாதிரி கனவு கண்டுறு'
'அவரு போலி டாக்டர்'னு எப்படி சொல்றே?'
'பல் ஆடுதுன்னு சொன்னா 'ஆட்டோட' பல்ல ஏன் வச்சிருக்கீங்க அப்படிங்கிறாரே
'பல் ஆடுதுன்னு சொன்னா 'ஆட்டோட' பல்ல ஏன் வச்சிருக்கீங்க அப்படிங்கிறாரே
'வீட்டுச் சாப்பாடு கிடைக்கும்'னு ஹோட்டல் வாசல்ல போர்'டு வெச்சது தப்பாப் போச்சி?'
'ஏன்?'
'அதான் எங்க வீட்லேயே கிடைக்கும்'னு எவனோ எழுதி வெச்சுட்டுப் போய்ட்டான்'
'ஏன்?'
'அதான் எங்க வீட்லேயே கிடைக்கும்'னு எவனோ எழுதி வெச்சுட்டுப் போய்ட்டான்'
'என்னங்க இது இவரு பாஸ்போர்ட வாங்க 'கோவணத்தோடு வந்திருக்காரு?'
'ஆவணத்துடன் வரவும் என்பதை தப்பா புரிஞ்சிக்கிட்டாரு'
'ஆவணத்துடன் வரவும் என்பதை தப்பா புரிஞ்சிக்கிட்டாரு'
'எதுக்கு சீரியல் பார்க்கிறப்ப உருட்டுக்கட்டை வெச்சுருக்கே?'
'கொஞ்சம் அசந்தா என் வீட்டுக்காரர் 'கிரிக்கெட்டுக்கு' மாத்திடுறார்.
'கொஞ்சம் அசந்தா என் வீட்டுக்காரர் 'கிரிக்கெட்டுக்கு' மாத்திடுறார்.
எனது காதல் கவிதைகள்...
நான்நானாக இருக்கமுக்கியகாரணம்நீதான்......
ஜீபூம்பா மாதிரிநேரங்களும்நொடிகளும்நிமிடங்களும் செல்கின்றன...உன்னோடு நான் பேசுகையில்....
எத்தனை தவறுகள் செய்தாலும்உன்னிடம் மட்டும், நான்உண்மையாகவேஇருக்கவிரும்புகின்றேன்.....
முடியாது என்று தெரிந்தும்விடாமுயற்ச்சியுடன்என்னையும் அழகு படுத்துமுயற்ச்சிப்பவள் நீதான்....
நீஎனை தொட்டநொடிகளில்லேடிஸ் பிங்கரின் அர்த்தம்முழுதாய் விளங்கியது...
எதைகண்டுமயங்கினாய் என்னிடம்?லேசானநகைச்சுவையும்,பளிர்சிரிப்பையும் தவிர,என்னிடம் என்ன இருக்கின்றது???
சில நேரங்களில்பயங்கர கோபம்வரும்உன்மீது....உன்னைஅழ வைக்கஎனது மனம் கணக்கு போடும்...சாத்தியமில்லாத செயல், என்றுசிரிக்கின்றது...எனது மனசாட்சி...
நீஎன் மடியில்தலைசாயும் போதுதான்..பலகூடுதல் பொறுப்புகள்நினைவுக்கு வந்து தொலைக்கின்றன....
கண்ணெதிரேகூடுதல் சுவை சேர்க்கபட்டதுநீகடித்து கொடுத்த,சாக்லெட்டில்...
ஜீபூம்பா மாதிரிநேரங்களும்நொடிகளும்நிமிடங்களும் செல்கின்றன...உன்னோடு நான் பேசுகையில்....
எத்தனை தவறுகள் செய்தாலும்உன்னிடம் மட்டும், நான்உண்மையாகவேஇருக்கவிரும்புகின்றேன்.....
முடியாது என்று தெரிந்தும்விடாமுயற்ச்சியுடன்என்னையும் அழகு படுத்துமுயற்ச்சிப்பவள் நீதான்....
நீஎனை தொட்டநொடிகளில்லேடிஸ் பிங்கரின் அர்த்தம்முழுதாய் விளங்கியது...
எதைகண்டுமயங்கினாய் என்னிடம்?லேசானநகைச்சுவையும்,பளிர்சிரிப்பையும் தவிர,என்னிடம் என்ன இருக்கின்றது???
சில நேரங்களில்பயங்கர கோபம்வரும்உன்மீது....உன்னைஅழ வைக்கஎனது மனம் கணக்கு போடும்...சாத்தியமில்லாத செயல், என்றுசிரிக்கின்றது...எனது மனசாட்சி...
நீஎன் மடியில்தலைசாயும் போதுதான்..பலகூடுதல் பொறுப்புகள்நினைவுக்கு வந்து தொலைக்கின்றன....
கண்ணெதிரேகூடுதல் சுவை சேர்க்கபட்டதுநீகடித்து கொடுத்த,சாக்லெட்டில்...
காம பதிவர்கள் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்)
ஒரு பெண் சற்றே பெரிதான வயிற்றை வைத்துக்கொண்டு இரவு ஒன்பது மணிக்கு அவசரம் அவசரமாக பதிவர் புருனோ போன்ற ஒரு நல்ல மருத்தவரை பார்க்க போயிருந்தாள்...கண்களில் தாரை தாரையாக கண்ணீர்,வார்டு பாய் அவள் உட்கார இடம் இல்லாதகாரணத்தால் அவன் இருக்கையை அவளுக்கு கொடுத்தான்.தாரைதாரையாக தண்ணீர் அவள் கண்களில்வந்து கொண்டே இருந்தது வரவேற்ப்பு அறையில் இருந்த டிவியில் கோலங்கள் ஓடிக்கொண்டு இருந்தது, ஆதி எப்போதும் போல் ஹீஸ்ட்டிரியா பேஷன்ட் போல் கத்திக்கொண்டு இருந்தான்.அவளுக்கான டோக்கன் எண்19 அவள் புடவை தலைப்பை வைத்து கேவி கேவி அழுததை பார்த்த வார்டு பாய் அவளை உடனே டாக்டரை பார்க்க அனுமதித்தான்.. அழுத கண்களுடன் வார்டு பாயிக்கு கண்களால் நன்றி சொல்லிய படியே அவள் உள்ளே சென்றாள்..மருத்துவர் உட்கார சொன்னார் அப்போதும் அவள் கேவி கேவி அழுவதை நிறுத்தவில்லை டாக்டர் பத்து நிமிடம் பொறுமை காத்தார்.. அவள் சற்றே சகஜ நிலைக்கு வந்து, கணவனை அழைத்து வராமல் குடும்பக்கட்டுப்பாடு செய்ய ஏதாவது மருந்து இருக்கிறதா? என்று வினவினாள்.டாக்டர் பொறுமையுடன் சொன்னார் அதற்க்கு சாத்தியம் இல்லை என்று...டாக்டர்/ உனக்கு திருமணம் ஆகி எத்தனை மாதம் ஆகின்றது?அவள்/எழு மாதங்கள் டாக்டர்டாக்டர்/ எழு மாதம்தானா? அதற்க்குள் ஏன் கணவணுக்கு குக ஆபரெஷன் செய்ய ஆர்வமாய் இருக்கிறாய்?அவள்/அவள் அழுத கண்களுடன் டாக்டர் நான் ஆறுமாசம், என் தங்கை ஐந்து மாசம்,என்தங்கையோட நண்பி நாலுமாசம், எங்க பக்கத்து வீட்டு ஆண்ட்டி மூனு மாசம், எங்க வீட்டு வேலைக்காரி இரண்டு மாசம்,இதெல்லாம் விட கொடுமை எங்க பாட்டி ஒருமாசம் டாக்டர் என்று சொல்லி கேவி கேவி அழுதாள்.டாக்டர்/இதெல்லாம் ஆம்பளையா பொறந்தா சகஜம் என்று சொல்வதற்க்குள் அவள் வீருட் என்று எழுந்து புடவைதலைப்பாள் மூக்கை சிந்தியபடி எது சகஜம் டாக்டர் என் வீட்டு நாய் ஜீம்மி நாளு நாளா வாந்தி எடுத்துக்குனு இருக்கு டாக்டர் என்று அவேச பட்டாள். டாகடர் ஆர்வாமாகி உங்க கணவர் எப்படி இருப்பார் என்று கேட்க இதோ இந்த பிளாக்ல இருக்கிற ஒரு வரி விடாம நிறுத்தி நிதானமா ஆர்வமா ரொம்ப நேரமா படிக்கிறாறே அவர்தான் என்றாள் அந்த பெண்....
ஒரு சின்ன ஏ ஜோக் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)