வியாழன், 3 ஜூன், 2010

வெட்கம்...


என் வீட்டு மலர்கள்வாடியதைப் பார்த்தேஎன் அந்த மூன்று நாட்களைக்கணக்கெடுக்கிறாயே !கள்வனடா நீ.நடசத்திரங்கள் தூங்குவதற்கும்நான் முற்றத்தில்நிலாக் காய்வதற்கும்சம்பந்தப்படுத்துகிறாய்சதிகாரா!உன்னோடு பேசிப்பேசியேசில பறவைகளின் பாஷைகூடபரிட்சயமாகிறது.தூவானத் திரை முகம் மறைக்ககலைந்த பொட்டைச் சரிசெய்தபடிதொங்கியபெட்டைக் குருவியின் குசுகுசுப்பைரசிக்கிறது மனம்.கவிதையாய்உன் பேச்சும்உன் காதல் குறிப்புக்களும்எனக்குள் நீபுதைந்த பொழுதுகள்உறைந்த நொடிகளின் மயக்கம்இப்போதும்...எங்கிருந்தோ ஒட்டிக்கொள்ளதென்றல் கிச்சுக் கிச்சு மூட்டகூசவைக்கிறது வெட்கம்.பேசுவதும்கேட்பதும்கெஞ்சுவதும்மறுப்பதும்விலகுவதும்அணைப்பதுமாய்எம் நெகிழ்வான விளையாடல்கனவோடுநீ நடத்தியபுலவியின் பொழுதுகளைவெளியில் சொல்லியேபாடுகிறது அந்தப் பேடு.அச்சச்சோவெனமனம் அலறஅன்றைய பொழுதைவெட்கத்தோடு தலையணைக்குள்ஒளிக்க மறைக்கமுயல்கிறதுஎன் மன அரங்கம் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.