வியாழன், 3 ஜூன், 2010

கண்ணாமூச்சி ஏனடா.....


உன்னருகில் நானிருக்கஎன் மனமோ தவிக்கிறதே...உன் நினைவில் இருந்ததனால்என் நினைவும் மறந்ததடா..
கண்களை மூடினேன் கனவு வந்தது...அட கனவு தானே என்றிருந்தேன்..கண்ணெதிரே நீயும் வந்தாய்...
கண்ணெதிரே வந்தவனைகையணைக்க நான் துடிக்ககனவே தான் என்று சொல்லிகண்முன்னே மறைந்ததேனோ?
உனதுயிரில் எனதுயிரும்ஒன்றெனவே கலந்ததுபோல்எனை நீங்கிப் பிரியாமல்என்னோடே இருப்பாயா?
உன்னிடம் ஒன்று கேட்பேன்மறைக்காமல் சொல்வாயா??உனக்குள் தொலைந்த என்னைஉயிராய் நீ காப்பாயா??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.