வியாழன், 3 ஜூன், 2010

உருகுதே..

பல்லாயிரம் பட்டாம்பூச்சிபறந்து வந்து என்னை அள்ளிச்அணைத்து மிதக்கச் செய்கிறதுநீ அலைபேசியில் மின்னும் போதுநரம்புகளில் சில சொட்டுமது ஊடுருவுகிறது நடு நிசியில்சிணுங்கும் குறுந்தகவலில்உன் பெயர் சிரிக்கும் போதுஎட்டிப் பறித்த எருக்கம் பூவின்இதழ் பிரித்து உறிஞ்சியெடுக்கும்ஒரு துளி தேனாய் சுவைக்கிறதுநீ வார்த்தைகளாய் மின்மடலில் வரும் போதுஇறக்கி வைத்த இட்லியில்கசிந்து வரும் ஆவியாய்மிதந்து கரைகிறது மனம்நீ என் பெயர் அழைக்கும் போதுபூந்தோட்டம் கடக்கும் போதுகோடிப் பூக்களின் வாசனைகனத்துக் கலந்து நாசி நிரடுகிறதுஉன் பெயரெழுதிய பேனாவை முகரும் போது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.