வியாழன், 3 ஜூன், 2010

எனக்காய்ப் பிறந்தவனே.......!!


எனக்காய்ப் பிறந்தவனே..ஏன் இத்தனை ஊடல் என்னிடம்...!!நான் வடித்த வரிகளிலே...நீ இருக்கும் இடம் அறிவாயே..நீ இருக்கும் என் மனதினைநானுனக்குச் சொல்லவும் வேண்டுமோ?சொல்லத்தான் வந்தேன் நான்.. எனை நீஅள்ளித்தான் சூடிக்கொண்டாய்..சொல்லியும் உனக்குப் புரியவில்லையா..இல்லைநான் சொன்னது தான் புரியவில்லையா?உன்னிரண்டு கை தழுவக் காத்திருக்கும்.. என்னிலையை.. உன்னிடம் சொல்கின்றேன்..உதவிக்கு வருவாயா?வண்டாடும் சோலையிலே மலர்ச் செண்டாக நானிருக்ககொண்டாட வந்தவனே... எனைத் திண்டாடும் படி ஏன் செய்தாய்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.