வியாழன், 3 ஜூன், 2010

தீராத கவிதைத் தாகம் !!!


ஆயிரம் கவிதைகள் கிறுக்கியும்
தீராத கவிதைத் தாகம்
உன் பெயரை எழுதிய
மறுநொடி தீர்ந்துபோனது .!
உன்னைப் பற்றி நான் எழுதிய
அந்த கவிதைதான்
என்னை கவிஞனாக்கியது .!


உன் முகம் பார்த்து
நான் வரைந்த அந்த ஓரப்புன்னகைதான்
என்னை ஓவியனாக்கியது .!

உன் சிற்றிடை பார்த்து
நான் செதுக்கிய அந்த சிலைதான்
என்னை சிற்பியாக்கியது .!


ஆனால்
இன்று உணர்ச்சிகள் உயிரிழந்த
இந்த இதயத்தில் எஞ்சியது
உன் நினைவுகள் மட்டுமே .!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.