வியாழன், 3 ஜூன், 2010

அன்பே உன் நினைவை!


நெஞ்சமெங்கும் நினைவலைகள்நிலவில் உதித்தமஞ்சப்பூக்களாய் பூத்திடவே-உன்மடியில் கிடந்தேனேமடிசாய்ந்து முகம்பார்த்தேன்-என்மனதுக்குள் மஞ்சம்கொண்ட உன் நினைவுகள் மரகத வீணை மீட்டிடவே!அன்பைச்சொரிந்து அனுதினமும்அலைபாய விடுகின்றாய்அந்திவானம் சிவப்பதுபோல்அதரம் சிவக்க வைக்கின்றாய்குளிர்கால இரவுகளில்கோடைவெப்பம் உன்னாலேவெயில்கால தருணங்களில்குளிரடிக்குது தன்னாலேநினைவுகளின் தாக்கத்தால்நித்தம் நித்தம் வேகின்றேன்-என்உணர்வுகள் மரித்தபின்னும்உன்நினைவோடு நானிருக்கஒவ்வொரு மணித்துளியும்ஓராயிரம் ஒளிக்கதிராய்நிலையாக நிலைத்திருக்கஒவ்வொரு நொடியும் உருகி உருகி வேண்டுகிறேன்.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.