வியாழன், 3 ஜூன், 2010

ஏக்கம் நனைக்கும் நினைவுகள் !!!


கடல் கரையாய் என் ஏக்கங்கள்
காய்கின்ற நேரத்தில் எல்லாம்
காதல் அலையாய்
உன் நினைவுகள் என்னை
நனைக்கத்தான் செய்கின்றன ..


எத்தனை முறைதான்
ஏமாற்றும் இந்த அலைகள்
உன்னைப்போல் ...
எத்தனை முறைதான்
ஏமாறும் இந்த கரைகள்
என்னைப்போல் ...


என்னை ஏமாற்றுவதில்
உனக்கு
மகிழ்ச்சி என்றால் .!
உன்னிடம் மீண்டும் மீண்டும்
ஏமாறுவதிலும் எனக்கு
மகிழ்ச்சியே !


இதயத்தின் கரை
எதுவரை என்று தெரியவில்லை .,
ஆனால்
உன் நினைவுகள் மட்டும்
ஒரு தொடர் கதையாக ..............................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.