வியாழன், 3 ஜூன், 2010

நம் மௌனம்

ஒரு பஞ்சுப்பொதியின் மென்மை போல்நம்மிடையே ஆன மௌனம் நம் கண்களிலிருந்து வார்த்தைகள் ஒருசிறகுபந்தைப் போல்மாறி மாறி பறக்கின்றன நீ சிலசமயம் உன் இமைகளால் அவற்றைச்சிறைபடுத்தி என்னை தோல்வியுறச் செய்கிறாய் என் முகம் நோக்கி வரும் சிலவற்றைநானும் கண்ணில் ஏந்த விழைகிறேன் ஆனால் அவை என் உதடு கிள்ளிஉன்னிடமே திரும்பச் சேர்கின்றன அவற்றை கவனமாய் உள்ளங்கையில் சேகரித்துநீ உன் கண்ணில் ஒற்றிக்கொள்கிறாய் நம் மௌனம் பற்றி எரிகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.