வியாழன், 3 ஜூன், 2010

தூங்க விடு கொஞ்சம்...


அன்புச் சுனாமியில்அரவணைப்புச் சுழிக்குள்இடறி விழுந்துநொறுங்கிப் போனதுஎன் பிடிவாதங்கள்.ஆறுதல் வார்த்தைகளில்அடிமையாய்ப் போனதுஎன் இதயம்.எழுப்பி எழுப்பிஅலுத்துப்போனதுஎனது ஆயுள்.இன்பமும் துன்பமும்சிறைப்பட்டுப் போனதுஉன் நினைவுகளுக்குள்.உன் நினைவால் நிறைந்துமேகத்தை மூடும் முகிலாய்மூடிக்கிடக்கிறதுஎன் அன்றாட அலுவல்கள்.இதயத் துடிப்போடுகூடியிருப்பதால்மூட மறுக்கிறது விழிகள்.உன் ஞாபகத் தூசுகளைதுடைத்துத் துடைத்தேதேய்ந்து போனதுஎன் மூளைக் குவளை.அன்பே காது கொடுசொல்கிறேன் ஒன்றுகேட்பாயா கொஞ்சம்.உன்னால் முடியுமா !எனக்குள் உன் நினைவுகளைநீயே முடக்கிப் போடு.இன்றாவது உனை மறந்து நான்நின்மதியாய்கண் துயில !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.