வியாழன், 3 ஜூன், 2010

பிரிவு...


பிரிவின் புதைகுழிக்குள்புதையுண்டு போயிருக்கிறாயாபிரிவின் வதையைஅனுபவித்திருக்கிறாயா எப்போதாவது !என்ன நடந்ததாகஎன்னை விட்டுப் பிரிந்தாய்என்ன சாதிக்கிறாய்வானுயர சிறகடிக்கசிறகு தந்து சேர்ந்து பறந்தநீ.....ஏன் பாதை மாறினாய்பிரிவின் வழி சுகமானதா !மரண தண்டனைக்குள்தள்ளப்பட்ட எனக்காய் வாதாடிவிடுதலை தருவாய்எனப் பார்த்திருக்கமீண்டும்சோகச் சிலுவைக்குள் அறைந்தவனேஎன் கல்லறைக் கற்கள்கூடகண்ணீர் சுரக்கும்உன் பெயர் கேட்டால் !எனக்கும் தெரியாமல்என்னைத் திருடிவிட்டுஎன் விருப்பம் தெரிவிக்கஒன்றுமே தெரியாதவனாய் மறுத்ததுபடமாய் விரிகிறது மனக்கண்ணில் !ம்ம்ம்.....இனி நான் தரவும்நீ மறுக்கவும் என்ன மிஞ்சியிருக்கிறது.புரையோடிய மனதையாவதுதிருப்பித் தந்துவிடு !கட்டிய கோட்டைகளை நீயே சுக்கு நூறாக்கு.நீ வளர்த்த பூக்களுக்கு நீயே புயலாகு.உன் அன்பால் கட்டுண்ட என்னைநீயே சுட்டுப் பொசுக்கு.செய் ...உன்னால் முடிந்த எல்லாமே செய் !பைத்தியக்காரனேயாருமே பிரிக்கமுடியாதுஎன்ற எங்களை பிய்த்தவன் நீ.இரத்த வரிகள் மட்டுமே இனி உன்னால்ஒவ்வொரு நிமிடத்திலும்.வருகின்ற கண்ணீர்த் துளிகளைச்சேகரித்து கவிதைகளாக்கிகாயமுன்எழுதப்பழகிக் கொள்கிறேன் !எத்தனையோ சோகங்களைசுட்ட பழம்போல ஊதித் தின்றுசெரிக்கப் பழகிக்கொண்ட என்னால்நீ தந்துவிட்டுப் போன சோகத்தைஏனோ பழக மறுக்கிறேன் !இப்போ என்னால் முடிந்ததெல்லாம்இரவுப்பாயில் புரண்டுகொண்டுஇதயத்து நினைவுகளை உதறிஉன் நினைவுகளை மட்டும்தனியாகப் பொறுக்கிஇறுகிய உன் இதயத்தில்எங்காவது ஓர் இடமிருந்தால்பொறுக்கிய சிறுதுண்டுஒன்றையாவதுபொருத்தலாமா என்று யோசித்தபடி !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.