வியாழன், 3 ஜூன், 2010

காதல் கிசுகிசு...


மழையில் நனைகிறாய்.அட ...நான் குடையாய்ப் பிறந்திருக்கவில்லையேபரவாயில்லை வாஎன் முந்தானைக் குடைக்குள் !என்னைச் சரியாக்கஉன்னால் மட்டுமே முடிகிறது. பார்...என்னைத் துவைத்துமனக் கொடியில் காயவிட்டிருக்கிறாய்கசங்காமலே !என் கவிதைகளைக் கண்ணில் ஒற்றி எடுத்துஎதையாவது வந்துசொல்லிக்கொண்டேயிருக்கிறாய்.சீ...போடா வெட்கமாயிருக்கிறது.உன் சின்னச் சின்னசில்மிஷங்களயெல்லாம் சேமிக்கிறேன்.பிற்காலத்திற்கு உதவுமே என்று !உன்னைப் பிடிக்கவில்லைவேணாம் போ என்றுசொல்லிச் சொல்லியேஉன் நினைவுக் கயிற்றிலேயேதொங்கித் தொடங்குகிறதுஎன் பயணம் !இப்போ எல்லாம்காற்றுக்கும் காவல் கிடக்கிறேன்.எனக்காக நீ தந்துவிட்டகெஞ்சல் கொஞ்சல்களையெல்லாம்அபகரித்துக்கொள்கிறது அது !நீ காற்றில் உளறியஒவ்வொரு சொற்களையும்சிடுக்கு எடுத்து வைத்திருக்கிறேன்.நீ திரும்பி வரும்வரைஎன்ன செய்வது நான் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.