வியாழன், 3 ஜூன், 2010

கல்லூரியில் அவளை முதலில் பார்த்த போது....


மானே என்றேன்..மானங்கெட்டவனே என்றாள் -மனம் தளரவில்லை.

கண்ணே என்றேன்..போடா கழுதை என்றாள் -நான் கலங்கவில்லை.

நீயின்றி நானில்லை என்றேன்..இல்லாமல் போகப்போகிறாய் என்றாள் -அவளை விட்டு நகரவில்லை.

என் உலகமே நீதான் என்றேன்..உன்னை உதைக்கப் போகிறேன் என்றாள் -அவளை உதறவில்லை

அழகாய் இருக்கிறாய் என்றேன்..அடி வாங்கப் போகிறாய் என்றாள் -அவளை அலட்சியப் படுத்தவில்லை

என் அகிலமும் நீ தான் என்றேன்சற்றும் யோசிக்காமல்அண்ணா ...என்றாள்பேசாமல் திரும்பி வந்துவிட்டேன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.