வெள்ளி, 18 ஜூன், 2010

மழை பெய்யும் நேரம்...


மழை பெய்யும் நேரம்...
மழை
நாளில்
நீ
நடந்து
சென்றாய்
மழை
துளிகள்
சண்டை போட்டு கொண்டன
உன் மேல் விழுவதற்கு
நானும் தான் .

ஏனோ இன்னும் தாமதம்....??



ஓர் நாள்...... உன்னுடன்
ஒழுங்காய் பேசவில்லை எனில்..
ஒளியற்று போவதேனோ என் முகமே..!

என் செய்தாய் என் அன்பே
எப்பொழுதும் உன் நினைவே..!

உன் குரலில் தான் என் ஜீவன் உளதோ?
உன் வார்த்தையில் தான் என் வசந்தம் உளதோ?

கண் மூடி யாசித்தேன்....
கடிதம் ஒன்று நீ வரைந்தாய்..
வரைந்த கடிதத்தில்..
வடிவாக உன் முகம் கண்டேன்..!

எனை மீட்க எப்போது வருவாயோ?
ஏங்குகிறேன் உன் வரவிற்காய்....
ஏனோ இன்னும் தாமதம் என்னுயிரே..?