வியாழன், 3 ஜூன், 2010

மௌனமாய்த் தேடுகிறேன்


இன்னும் எத்தனை விடியல்தான்
கசங்காத அடர்த்தியான போர்வைக்குள்
முயல் குட்டியாய் சுருண்டு எனக்கானவெப்பத்தை நானே தேடுவேன்போர்வை விலகிய வலது பாதத்தின்சுண்டு விரல் வழி நுழைந்த குளிர்எலும்புக்குள்ளும் நரம்புக்குள்ளும்இன்னும் கூடுதல் இம்சையாய்நீ கையோடு எடுத்துச் சென்று விட்டஉன் சதைகளில் கசியும் வெப்பத்திற்குகைகளை நீட்டி நடுங்கும் உடலோடு,உதறும் மனதோடு வாடுகிறேன்மண்டிக்கிடக்கும் புதர்களைத் தாண்டிஉன் கைகள் நீளமுடியாத தொலைவில்தன்னந்தனியாய் வாடுகிறேன் வாசமும்வண்ணமும் உணரப்படாத மலராய்துளியும் குறையாமல் காய்ந்து கனக்கிறதுஅள்ளியெடுக்க நீ இல்லாமல்பருவத்தில் எனக்குள் வெடித்துச்சிதறிமனதில் மலையாய் குவிந்த காதல் நீ தேட மறந்த நாளன்று எனக்குள்நானே தொலைந்துபோனேன்ஆனாலும் மௌனமாய்த் தேடுகிறேன்அடையாளம் சிதைந்த என்னை....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.