ஞாயிறு, 6 ஜூன், 2010

படித்ததில் பிடித்த தத்துவங்கள் & நகைச்சுவைகள்

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோஅதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.=========================வெற்றி என்பது நிரந்தரமல்ல;தோல்வி என்பது இறுதியானதுமல்ல!=========================ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.=========================நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,ஒரு நல்ல நண்பனின் மவுனம்இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.=========================நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;ஆனால் அனுபவமோதவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது. - பில் கேட்ஸ்=========================சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.அவற்றைக் கடந்து சென்றால்அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை!=========================மேலாளர்: உன் தகுதி என்ன?சர்தார்: நான் Ph.Dமேலாளர்: Ph.Dன்னா என்ன?சர்தார்: Passed high school with Difficulty.=========================நானும் சரி ஒரு ரவுண்டுதானேன்னு இன்டர்வியூக்குப் போனேன்.அங்கே 5பேரும்மா.மாத்தி மாத்தி கேள்வி கேட்டாங்க.என்னால முடிஞ்ச வரைக்கும் பதில் சொன்னேன்.திடீர்னு ஒருத்தன் HRக்கு போன் போட்டுமச்சான் ஃபிரீயா இருந்தா வாடா.ஒருத்தன் சிக்கியிருக்கான்னு சொன்னான்.சரின்னு நானும் 4ஆவது மாடிக்குப் போனேன்.அங்கே 8 பேரும்மா.அவங்களால எவ்வளவு முடியுமோஅவ்வளவு கேள்வி கேட்டாங்க.நானும் எவ்வளவு நேரம் பதில் தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது?அதுல ஒருத்தன் சொன்னான்இவன் எவ்வளவு கேள்வி கேட்டாலும் சமாளிக்கிறான்டாஇவன் ரொம்ப அறிவாளின்னு சொல்லிட்டாம்மா.=========================(தேர்வு அறையில்)ஆசிரியர்: டேய் என்னடா... கையில் ஃபார்முலா எழுதியிருக்கே?மாணவன்: எங்க கணக்கு வாத்தியார்தான் ஃபார்முலா எல்லாம் விரல் நுனியில்இருக்கணும்னு சொன்னார்.=========================விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.=========================அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க மனசு சொல்வதை மட்டும்கேளுங்கள்.ஏன்னா அறிவு......சரி விடு. இல்லாததைப் பத்திப் பேச வேண்டாம்.=========================ஒண்ணு + ஒண்ணு = ரெண்டுநீதான் எனக்கு ஃபிரெண்டு.ரெண்டு + ரெண்டு = நாலுநீ ரொம்ப வாலு.மூணு + மூணு = ஆறுநீ இல்லாம போரு.நாலு + நாலு = எட்டுஎஸ்எம்எஸ் அனுப்பலன்னா குட்டு.=========================நட்பு எனும் கலையானது, ஒரு நல்ல இசைக் கருவியை வாசிப்பது போன்றது. முதலில் விதிகளின்படி இந்தக் கருவியை வாசிக்கத் தொடங்க வேண்டும். பிறகு விதிகளை மறந்துவிட்டு இதயத்திலிருந்து வாசிக்க வேண்டும். =========================கடவுள், நகைச்சுவையுடன் எழுதக்கூடிய ஒரு சிறந்த எழுத்தாளர். ஆனால் அவர், நகைச்சுவையுடன் நடிக்கத் தெரியாத மோசமான நடிகர்கள் பலரைக் கொண்டு தன் நாடகத்தை நடத்துகிறார்.=========================30 மாநிலங்கள்1618 மொழிகள்6400 சாதிகள்6 மதங்கள்6 இனங்கள்29 பெரிய பண்டிகைகள்ஒரு நாடு!இந்தியனாக இருப்பதற்காகப் பெருமைப்படுங்கள்!=========================உயிரின் சுவாசம் மூச்சுகண்களின் சுவாசம் கனவுஇதயத்தின் சுவாசம் துடிப்புநாக்கின் சுவாசம் பேச்சுஎன் நட்பின் சுவாசம் நீ=========================எனக்கு இட்லியைப் பிடிக்காதுதோசையைத்தான் பிடிக்கும்.ஏன்னா, இட்லி கூட்டமா வேகும்.தோசை சிங்கிளாத்தான் வேகும்.கூல்... =========================உதவும் கரங்கள் ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.- அன்னை தெரஸா.=========================வெற்றி என்பது நிரந்தரமல்ல;தோல்வி என்பது இறுதியானதுமல்ல!அதனால்,வெற்றிக்குப் பிறகுதொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;தோல்விக்குப் பிறகுதொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்!=========================எல்லாம் சில காலமே - ரமண மகரிஷி=========================கண்களைத் திறந்து பார்அனைவரும் தெரிவார்கள்.கண்களை மூடிப் பார்.உனக்குப் பிடித்தவர்கள் மட்டும் தெரிவார்கள்!=========================தோல்வியின் அடையாளம் தயக்கம்!வெற்றியின் அடையாளம் துணிச்சல்!துணிந்தவர் தோற்றதில்லைதயங்கியவர் வென்றதில்லை!=========================கையில் 10 ரோஜாக்களோடுகண்ணாடி முன் நில்லுங்கள்!இப்போது நீங்கள் 11 ரோஜாக்களைக் காண்பீர்கள்!அந்த 11ஆவது ரோஜா,உங்கள் புன்னகை!நீங்ள் இப்போது புன்னைப்பதை நான் அறிவேன்!=========================வெற்றியை விரும்பும் நமக்குத் தோல்வியைத் தாங்கும் மனம் இல்லை;தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்.=========================உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?பிரச்சினைகள் வரும்போது அல்ல;பிரச்சினைகளைக் கண்டு நீங்கள்பயந்து விலகும்போது. - பாரதியார்=========================எவையெல்லாம் அழகாக இருக்கின்றனவோஎவையெல்லாம் அர்த்தத்துடன் இருக்கின்றனவோஎவையெல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமோஅவை அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கட்டும்!இன்றும் நாளையும் என்றும்.=========================இதை மெதுவாகப் படியுங்கள்:LIFEISNOWHEREஇதை எப்படிப் படித்தீர்கள்?LIFE IS NO WHERE என்றா?LIFE IS NOW HERE என்றா?நாம் பார்க்கிற விதத்தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த ஒற்றை வரிஉணர்த்திவிடுகிறது!=========================மின்தடை ஏற்படும்போதுதான்நமக்கு மெழுதுவர்த்தி ஞாபகம் வருகிறது.அப்படித்தான் பிரச்சினைகளின் போதுஒரு நண்பர், தீர்வு என்னும் விளக்கேந்தி வருகிறார்.நான் உனக்கொரு மெழுகுவர்த்தியாக இருப்பேன்என்ற நம்பிக்கை எனக்குண்டு.=========================நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!உங்கள் கண்ணீர்,உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!=========================ஒரு நாள், கடவுள் என்னைக் கேட்டார்:"இந்த நண்பர் இன்னும் எவ்வளவு காலம்உன்னுடன் இருக்க வேண்டும்?"நான் கண்ணீர் உகுத்தேன்.என் கண்ணீர்த் துளிஒரு பெருங்கடலில் விழுந்தது.நான் இப்போது கடவுளிடம் சொன்னேன்:"இந்தத் துளியை நீங்கள் கண்டுபிடிக்கும் வரை."=========================நீ மற்றவருக்கு வழிகாட்டி ஆவதற்காகப்பிறந்திருக்கிறாய்.ஏன் மற்றவர்களிடம் உன் வழிகாட்டியைத்தேடிக் கொண்டிருக்கிறாய்?இந்த உலகம்உன் வெற்றிக் கதையைப் படிக்கக்காத்துக்கொண்டிருக்கிறது.=========================பிறக்கும்போது தாயை அழவைக்கிறோம்இறக்கும்போது எல்லோரையுமே அழவைக்கிறோம்வாழும்போதாவதுஎல்லோரிடமும் சிரிக்கப் பழகுவோம்.=========================2 சொட்டு போட்டா அது போலியோ.4 சொட்டு போட்டா அது உஜாலா2880 சொட்டு போட்டா அது குவாட்டர்இதுதான் இன்னிக்கு மேட்டர்.=========================வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும்உப்பாக இருக்கலாம்.ஆனால்,அவைதான்வாழ்வை இனிமையாக மாற்றும்.=========================ஒவ்வொரு மாநிலப் பெண்களிடமும்ஒவ்வொரு சிறப்பு உண்டு.கேரளா: நீண்ட கூந்தல்.ஆந்திரா: கூரிய மூக்குமும்பை: செழுமையான கன்னங்கள்பஞ்சாப்: பளிச் என்ற நிறம்தமிழ்நாடு: ஒன்னுமே இல்லேன்னாலும் ஓவரா சீன் போடறது=========================நாம் அனைவரும் ஒரே அளவு திறமை பெற்றவர்கள் இல்லைஆனால்,நம் திறமையை வளர்த்துக்கொள்ளஒரே அளவு வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம்.- அப்துல்கலாம்.=========================ஓர் உண்மை:நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது,நீ யாரை விரும்புகிறாயோஅவரை நினைத்துக்கொள்வாய்!நீ துயரத்தில் இருக்கும்போது,உன்னை யார் விரும்புகிறாரோஅவரை நினைத்துக்கொள்வாய்!=========================ஒரு சிறிய கையசைப்பு, நம்மை அழவைக்கலாம்!ஒரு சிறிய நகைச்சுவை, நம்மைச் சிரிக்கவைக்கலாம்!ஒரு சிறிய அக்கறை, நம்மைக் காதலில் விழவைக்கலாம்!ஒரு சிறிய தொடுதல், நம் உணர்வைக் கூர்மைப்படுத்தலாம்!நானும் நம்புகிறேன்என் சிறிய குறுஞ்செய்தி,உனக்கு என்னை நினைவுபடுத்தலாம்!=========================உங்கள் இதயத்தில் மகிழ்ச்சிஉங்கள் ஆன்மாவில் புத்துணர்வுஉங்கள் வாழ்வில் வெற்றிஉங்கள் முகத்தில் புன்னகைஉங்கள் இல்லத்தில் அன்பின் நறுமணம்இவை அனைத்தும் உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.