ஞாயிறு, 6 ஜூன், 2010

எமது கற்பனை கவிதைகள்!

பெண்ணே !உன் ஓரப்பார்வை அம்புகளால் தாக்கப்பட்டுகாயம்பட்ட வேடன் நான் !உன் காந்தப்பார்வை வலை வீச்சீல் மாட்டித்துடிக்கும் மீனவன் நான் !உன் நினைவுகளுடன் உருகி, உனக்காகவே வாழ்ந்து, கனவுகளுடன் காத்திருக்கும் மூடன் நான் !

பெண்ணே !மரங்களுக்கு மழைக்காலம் போல்பறவைகளுக்கு குளிர்காலம் போல்விலங்குகளுக்கு கோடை காலம் போல்உன்னை நினைக்கும் ஒவ்வொரு காலமும் என்னில் வசந்த காலம் ! ஆனாலும் நீ என்னிடம் பேசியது இறந்தகாலம் !நான் எனக்குள் பேசுவது நிகழ்காலம் !உன் நினைவுகளால் என்னாகுமோ என் எதிர்காலம் !

பெண்ணே !உன் நினைவுகளின் வரவு என்னை விட்ட நீங்காத செலவு !உன்னால் தன்னம்பிக்கையை என்னுள் கூட்டிக்கொள்கிறேன் !உனக்கு பிடிக்காததை என்னில் கழித்துக்கொள்கிறேன் !உன்னை நினைத்தே என் திறமையை பெருக்கிக்கொள்கிறேன் !உனக்காகவே என் வாழ்க்கையை வகுத்துக்கொள்கிறேன் !என்றும் உன்னை எனக்கு 100 சதவீதம் பிடித்திருப்பதால்.....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.