சனி, 5 ஜூன், 2010

ஏன் அப்படி செய்தாள்?


எனக்கொரு காதல் இருந்தது
வெயிலடிக்கும் சித்திரை மாத
சிறு மழையென
சட்டென என் முன் வந்தவள்
அவள்
எல்லாவற்றுக்கும்
பதில் வாங்கும் பிடிவாதக்காரி
வாதத்தில் தோற்க விரும்பாத
அழுத்தக் காரியும் கூட
அவளை
எவ்வளவு பிடிக்குமோ
அவ்வளவு
வெறுக்கவும் தோணும்
அவள்
விரும்பும் யாவும்
நான் விரும்ப வேண்டும்
வெட்கப்பட்டு பார்த்ததில்லை
ஒரு இரவின் மத்தியில்
அவள் அழைப்பு
எதிர்முனையில் கண்ணீர்
எப்போதும்போல இன்னொரு நாடகம்
என்பதாய்
தூக்க அயர்ச்சியில் தொடர்பை
துண்டிக்க
மறுநாள் காலை
துயரமாய் விடிந்தது ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.