செவ்வாய், 8 ஜூன், 2010

மரண சிந்தனை!!!!


மனமே மனமே பாவம் செய்வதேன்மரணத்தை மறந்தே மமதைகொள்வதேன்மரணசிந்தனை நினைவில் வரலையா!இல்லைமரணமென்பதே உனக்கு இல்லையா!
பூமியில் இறைவன் படைத்த அனைத்துமேபுனிதமனிதனே உனக்காவே! -இங்குசிறிதுகாலம் நீ இளைப்பாறவே!-இதில்பொழுதுபோக்குகள் நிறைந்து கிடக்குதுபுண்ணியங்களும் குவிந்து இருக்குது
புண்ணிய வழியை புறந்தள்ளிவிட்டுபாவத்தின் பக்கம் மனது போவதேன்பாதை மாறியே பயணம் செய்வதேன்உலகவாழ்க்கையில் உன்னைத்தொலைத்ததேன்உண்மையை உதறி உள்ளம் அலைவதேன்
கூடிக்கூடியே கோள்சொல்கிறாய்குடும்பத்தைப்பிரிக்க புறஞ்சொல்கிறாய்கூத்து கும்மாளாம் தேடிப்போகிறாய்கூட்டுக்கொள்ளையில் பங்குகொள்கிறாய்
மண்ணிலும் பொன்னிலும் மயக்கங்கொள்கிறாய்மதுவிலும் மாதுவிலும் மனதைத்தொலைகிறாய்மதப்போர்வையில் தன்னை ஒளிந்துகொண்டுமனிதனைக்கொன்று மனிதம் கொல்கிறாய்
ஃபேஷன் ஃபேஷனென வேசமிடுகிறாய்பெருமைப்பேசியே பொழுதைக்கழிக்கிறாய்
வர தட்சனையை வாங்கிகொள்கிறாய் வறுமையுடையோரை வதைசெய்கிறாய்வட்டிக்கு வட்டி வாங்கிகுவிக்கிறாய்வரம்புமீறியே வாழநினைக்கிறாய்
இப்படி,,,,,,,,,,
பாவத்தின் பக்கம் மனதுபோவதேன்புண்ணிய வழியை மறந்துபோனதேன்மரணசிந்தனை மனதில் வரலையா இல்லைமரணமென்பதே நினைவில் இல்லையா.
இம்மையில் வாழ்வே சிலகாலம்தான்உண்மையில் வாழ்க்கைமறுமையில்தான் -இதைமனதில் கொண்டுயிங்கு வாழ்க்கை நடத்திடு மரணித்தப் பிறகுமறுமையில் ஜெயித்திடு....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.