வெள்ளி, 4 ஜூன், 2010

தெரிந்து கொள் என்னை...

உரையாடிய சொல்லும்உறவாடிய பொழுதும்உன்னை கேட்கின்றனஎங்கே என்று?

இறந்த பின்மொழியாய் பிறப்பேன்இப்பிறவியில் நான் சொல்லாதஉன் பெயர் எழுத...
காதோடு பேச முடியாத போதுகாற்றிலாவதுதூது விடுநான் உயிர்த்தெழுவதுநீ பேசும் ஒரு சில நொடிகள் தான்.....

உன் விழியசைவில் துடிக்கும் இதயம் உன் அனுமதியின்றி நிற்காது...

காட்சியாய் உன்னைதந்து விட்டுபார்வையை பறித்துக் கொண்டாய்பார்வையற்றவளாய்இதோ இமைகளால்உன்னை தழுவிக்கொண்டே!!!!!!!!!!!!

வியாழன், 3 ஜூன், 2010

மீண்டும் என் காதலிக்கு ...............


உன் சிரிப்பின் வரைவிலக்கணம்தெரியாமல் எத்தனை முறை குட்டு பட போகிறேனோ தெரியவில்லைகாதலிடம் விளங்கி கொள்ள முடியாதபாடங்கள் உன்னை எனக்குநினைவுக்கு கொண்டு வந்துபோகின்றன .ஊசியில்நூல் நுழைக்க முயலும் குருட்டு தையல் காரனாய் நான் உன் இதயத்துக்குள்நுழைய வழி பார்கிறேன்

கவிதை எழுத தெரியாதே !பெண்ணே உன்னைபார்க்கும் வரையிலே !நாள்தோறும் உன் முகம்தேடி வந்தேன் என் முகம்மறக்கும் வரை !!இதுதான் காதலோ !! உன்னில்என்னைத் தொலைத்தேனே ...

நினைவுகளில் நீ.....


மனதில் உன்னை எழுதி வைத்தேன்...மறக்கக் கூடாது என்பதற்கு அல்ல...மறுபடியும் உன்னை...மறந்தும் நினைக்கக் கூடாது என்பதற்கே.....!!!

உன்னை ஒன்று கேட்பேன்...


பார்த்தாலோ நீ தென்றல்...பழகிய பின் ஏன் புயலானாய்...?? மிஞ்சினால் கெஞ்சும் இந்தக் காலத்தில்...நான் கெஞ்சியும் நீ மிஞ்சுகிறாயே......ஏன் பெண்ணே...!!!

கண்ணாமூச்சி ஏனடா.....


உன்னருகில் நானிருக்கஎன் மனமோ தவிக்கிறதே...உன் நினைவில் இருந்ததனால்என் நினைவும் மறந்ததடா..
கண்களை மூடினேன் கனவு வந்தது...அட கனவு தானே என்றிருந்தேன்..கண்ணெதிரே நீயும் வந்தாய்...
கண்ணெதிரே வந்தவனைகையணைக்க நான் துடிக்ககனவே தான் என்று சொல்லிகண்முன்னே மறைந்ததேனோ?
உனதுயிரில் எனதுயிரும்ஒன்றெனவே கலந்ததுபோல்எனை நீங்கிப் பிரியாமல்என்னோடே இருப்பாயா?
உன்னிடம் ஒன்று கேட்பேன்மறைக்காமல் சொல்வாயா??உனக்குள் தொலைந்த என்னைஉயிராய் நீ காப்பாயா??

காதல்..... காதல்..... காதல்.....!!


காதல் என்றாய் கன்னம் சிவந்தேன்..கண்ணிமைகள் படபடக்ககதவோரம் சென்று மறைந்தேன்..!!
கதவருகே வந்து நின்றுகை விரலால் எனைத் தீண்டகண்மூடி ஒரு கணமேஉன் கைகளுக்குள் நான் புகுந்தேன்..!!
கைகளுக்குள் புகுந்த என்னைகாதலால் நீ தழுவ கணநேரத்தில் சுதாரித்தே நான்கலவரமாய் விலகி நின்றேன்..!!
ஏனென்று நீ கேட்க வெட்கத்தில் நான் பூக்க..கற்பனையில் விரிந்ததுவே நம் அற்புதமான காதல் வாழ்க்கை..!!

எனக்காய்ப் பிறந்தவனே.......!!


எனக்காய்ப் பிறந்தவனே..ஏன் இத்தனை ஊடல் என்னிடம்...!!நான் வடித்த வரிகளிலே...நீ இருக்கும் இடம் அறிவாயே..நீ இருக்கும் என் மனதினைநானுனக்குச் சொல்லவும் வேண்டுமோ?சொல்லத்தான் வந்தேன் நான்.. எனை நீஅள்ளித்தான் சூடிக்கொண்டாய்..சொல்லியும் உனக்குப் புரியவில்லையா..இல்லைநான் சொன்னது தான் புரியவில்லையா?உன்னிரண்டு கை தழுவக் காத்திருக்கும்.. என்னிலையை.. உன்னிடம் சொல்கின்றேன்..உதவிக்கு வருவாயா?வண்டாடும் சோலையிலே மலர்ச் செண்டாக நானிருக்ககொண்டாட வந்தவனே... எனைத் திண்டாடும் படி ஏன் செய்தாய்?

ஈரைந்து மாதம்கருப்பையில் வாழ் முழுதும்உன் மனதில்...அறியா வயதில்தெரியாமல் செய்த பிழைவாலிப வயதில்தெரிந்து செய்த தவறுஇரண்டும் பொறுத்தாய்...பள்ளி செல்லும் வயதில்உனை வீட்டு நீங்கியதில்லை..இன்று உனை கண்டே ஆகியதுமாதங்கள் பல..உனை நினைக்க ஒரு தினம்தேவை இல்லை - மறந்தால்தானே நினைக்க !!!

காதல் பரிசு


என்னில் பாதியாய்வாழ்வின்மீதியாய் கலந்தாய்..என் வெற்றியில் நீமகிழ்ந்தாய் - தோல்வியில்உற்சாகமூட்டினாய்.
கண்ணசைவில் சித்திரங்கள்படைத்தாய் - வாழ்வைவசந்த கால சோலையாக்கினாய்...
என் சுகமே உன்விருப்பம் என்றாக்கிக்கொண்டாய்..கோபங்களையும் சிரிப்பால்புன்னைகை ஆக்கினாய்..உன் பாதியாய் அல்லமுழுதுமாய் நானானாய் ...என்ன பரிசு தர நான் - எனைமுழுதும் அளித்தாலும் அது தகுமோ ??

பிரிந்தது ஏனோ ?


அலைபேசியின் அழைப்பில் உன் குரலை எதிர்பார்த்து ஏமாந்தேன் ..பேருந்து நிறுத்ததிலே உன் இரு கண்களை தேடி விழிகள் பூத்தது ...தினமும் நீ வரும் வழிபார்த்து காத்திருந்தேன் கரைந்தது நேரம்தான் ...கடற்கரையில் அலைகள் மட்டும் வந்து மோதவெற்று மனிதனாய் நான். ..அன்னையாய் எனைஅரவணைத்துகலக்கங்கள் தீர்த்தாயே ..கோபத்தில் நான் கத்த தென்றலாய் சாந்தப்படுத்தினாய் ..சோகத்தில் இன்று நான் எங்கே சென்றாய் நீ ??

எல்லாம் சரிதான்...


கிழித்தெறியமாட்டாய்என்கிற நம்பிக்கையில்தான்மனு ஒன்று சமர்ப்பித்தேன்.சொல்லாமலே கிழித்தது ஏன் ?மௌனம்போல ஒரு சுமை இல்லை.நம் கைகள் இறுக்கிய நிமிடம்தான்மௌனம் என நினைத்தது தப்பானது.இன்று...இன்றைய உன் மௌனம் ?உன்னை எழுத நினைக்கிறேன்என் கவிதையில்கூடநிறைய எழுத்துப் பிழைகள் !!!

காதல் கிசுகிசு...


மழையில் நனைகிறாய்.அட ...நான் குடையாய்ப் பிறந்திருக்கவில்லையேபரவாயில்லை வாஎன் முந்தானைக் குடைக்குள் !என்னைச் சரியாக்கஉன்னால் மட்டுமே முடிகிறது. பார்...என்னைத் துவைத்துமனக் கொடியில் காயவிட்டிருக்கிறாய்கசங்காமலே !என் கவிதைகளைக் கண்ணில் ஒற்றி எடுத்துஎதையாவது வந்துசொல்லிக்கொண்டேயிருக்கிறாய்.சீ...போடா வெட்கமாயிருக்கிறது.உன் சின்னச் சின்னசில்மிஷங்களயெல்லாம் சேமிக்கிறேன்.பிற்காலத்திற்கு உதவுமே என்று !உன்னைப் பிடிக்கவில்லைவேணாம் போ என்றுசொல்லிச் சொல்லியேஉன் நினைவுக் கயிற்றிலேயேதொங்கித் தொடங்குகிறதுஎன் பயணம் !இப்போ எல்லாம்காற்றுக்கும் காவல் கிடக்கிறேன்.எனக்காக நீ தந்துவிட்டகெஞ்சல் கொஞ்சல்களையெல்லாம்அபகரித்துக்கொள்கிறது அது !நீ காற்றில் உளறியஒவ்வொரு சொற்களையும்சிடுக்கு எடுத்து வைத்திருக்கிறேன்.நீ திரும்பி வரும்வரைஎன்ன செய்வது நான் !

தூங்க விடு கொஞ்சம்...


அன்புச் சுனாமியில்அரவணைப்புச் சுழிக்குள்இடறி விழுந்துநொறுங்கிப் போனதுஎன் பிடிவாதங்கள்.ஆறுதல் வார்த்தைகளில்அடிமையாய்ப் போனதுஎன் இதயம்.எழுப்பி எழுப்பிஅலுத்துப்போனதுஎனது ஆயுள்.இன்பமும் துன்பமும்சிறைப்பட்டுப் போனதுஉன் நினைவுகளுக்குள்.உன் நினைவால் நிறைந்துமேகத்தை மூடும் முகிலாய்மூடிக்கிடக்கிறதுஎன் அன்றாட அலுவல்கள்.இதயத் துடிப்போடுகூடியிருப்பதால்மூட மறுக்கிறது விழிகள்.உன் ஞாபகத் தூசுகளைதுடைத்துத் துடைத்தேதேய்ந்து போனதுஎன் மூளைக் குவளை.அன்பே காது கொடுசொல்கிறேன் ஒன்றுகேட்பாயா கொஞ்சம்.உன்னால் முடியுமா !எனக்குள் உன் நினைவுகளைநீயே முடக்கிப் போடு.இன்றாவது உனை மறந்து நான்நின்மதியாய்கண் துயில !!!

காதலுக்கு விலையில்லை...


முத்திரை இல்லைமுதலில்.முகவரி இல்லை !முன்னுரை இல்லை !முன்பின் தெரியவில்லை !என்...கைக்குக் கிடைத்தகடிதம் மட்டும்புலம்புகிறதுகாதல் தோல்வியென்று !!!

நே[கா]ற்று முத்தம்...


என் கண்ணுக்குள் நீயாய்நெஞ்சுக்குள் நிறைவாய்.இன்னும் இன்னும்கன்னம் இனிக்கநீ...காற்றலையில் தந்தஉன் முதல் முத்தத்தைபெற்றவளாய் ரசித்தபடி.இப்போ என்னை இறக்கச்சொல்மாட்டேன் என்று மறுக்காமல்உன் காலடியில்.ஒரே ஒரு சிடுக்கு மட்டும்மனசோடுஒதுங்கிய கிளிஞ்சல்களாய்உன்னையும்உன் நினைவுகளையும்சேர்த்துச் சேர்த்துநிறைத்து வைத்திருக்கிறேன்மனக் கிடங்குகள் எங்கும்.பக்குவமாய்யாரிடம் கொடுத்துச் செல்லநான் !!!முத்த மயக்கத்தோடு

பிரிவு...


பிரிவின் புதைகுழிக்குள்புதையுண்டு போயிருக்கிறாயாபிரிவின் வதையைஅனுபவித்திருக்கிறாயா எப்போதாவது !என்ன நடந்ததாகஎன்னை விட்டுப் பிரிந்தாய்என்ன சாதிக்கிறாய்வானுயர சிறகடிக்கசிறகு தந்து சேர்ந்து பறந்தநீ.....ஏன் பாதை மாறினாய்பிரிவின் வழி சுகமானதா !மரண தண்டனைக்குள்தள்ளப்பட்ட எனக்காய் வாதாடிவிடுதலை தருவாய்எனப் பார்த்திருக்கமீண்டும்சோகச் சிலுவைக்குள் அறைந்தவனேஎன் கல்லறைக் கற்கள்கூடகண்ணீர் சுரக்கும்உன் பெயர் கேட்டால் !எனக்கும் தெரியாமல்என்னைத் திருடிவிட்டுஎன் விருப்பம் தெரிவிக்கஒன்றுமே தெரியாதவனாய் மறுத்ததுபடமாய் விரிகிறது மனக்கண்ணில் !ம்ம்ம்.....இனி நான் தரவும்நீ மறுக்கவும் என்ன மிஞ்சியிருக்கிறது.புரையோடிய மனதையாவதுதிருப்பித் தந்துவிடு !கட்டிய கோட்டைகளை நீயே சுக்கு நூறாக்கு.நீ வளர்த்த பூக்களுக்கு நீயே புயலாகு.உன் அன்பால் கட்டுண்ட என்னைநீயே சுட்டுப் பொசுக்கு.செய் ...உன்னால் முடிந்த எல்லாமே செய் !பைத்தியக்காரனேயாருமே பிரிக்கமுடியாதுஎன்ற எங்களை பிய்த்தவன் நீ.இரத்த வரிகள் மட்டுமே இனி உன்னால்ஒவ்வொரு நிமிடத்திலும்.வருகின்ற கண்ணீர்த் துளிகளைச்சேகரித்து கவிதைகளாக்கிகாயமுன்எழுதப்பழகிக் கொள்கிறேன் !எத்தனையோ சோகங்களைசுட்ட பழம்போல ஊதித் தின்றுசெரிக்கப் பழகிக்கொண்ட என்னால்நீ தந்துவிட்டுப் போன சோகத்தைஏனோ பழக மறுக்கிறேன் !இப்போ என்னால் முடிந்ததெல்லாம்இரவுப்பாயில் புரண்டுகொண்டுஇதயத்து நினைவுகளை உதறிஉன் நினைவுகளை மட்டும்தனியாகப் பொறுக்கிஇறுகிய உன் இதயத்தில்எங்காவது ஓர் இடமிருந்தால்பொறுக்கிய சிறுதுண்டுஒன்றையாவதுபொருத்தலாமா என்று யோசித்தபடி !!!

வெட்கம்...


என் வீட்டு மலர்கள்வாடியதைப் பார்த்தேஎன் அந்த மூன்று நாட்களைக்கணக்கெடுக்கிறாயே !கள்வனடா நீ.நடசத்திரங்கள் தூங்குவதற்கும்நான் முற்றத்தில்நிலாக் காய்வதற்கும்சம்பந்தப்படுத்துகிறாய்சதிகாரா!உன்னோடு பேசிப்பேசியேசில பறவைகளின் பாஷைகூடபரிட்சயமாகிறது.தூவானத் திரை முகம் மறைக்ககலைந்த பொட்டைச் சரிசெய்தபடிதொங்கியபெட்டைக் குருவியின் குசுகுசுப்பைரசிக்கிறது மனம்.கவிதையாய்உன் பேச்சும்உன் காதல் குறிப்புக்களும்எனக்குள் நீபுதைந்த பொழுதுகள்உறைந்த நொடிகளின் மயக்கம்இப்போதும்...எங்கிருந்தோ ஒட்டிக்கொள்ளதென்றல் கிச்சுக் கிச்சு மூட்டகூசவைக்கிறது வெட்கம்.பேசுவதும்கேட்பதும்கெஞ்சுவதும்மறுப்பதும்விலகுவதும்அணைப்பதுமாய்எம் நெகிழ்வான விளையாடல்கனவோடுநீ நடத்தியபுலவியின் பொழுதுகளைவெளியில் சொல்லியேபாடுகிறது அந்தப் பேடு.அச்சச்சோவெனமனம் அலறஅன்றைய பொழுதைவெட்கத்தோடு தலையணைக்குள்ஒளிக்க மறைக்கமுயல்கிறதுஎன் மன அரங்கம் !!!

வெளிநாட்டில் வாழ்பவன்

முகம் மறந்து போன
மகனும்
மகளும்
அலுவலக மேஜையின் மீது
சிரித்துக் கொண்டிருக்க
ஒரு வருடம் கடன்
ஒரு வருடம் வீடு
ஒரு வருடம் தங்கையின் திருமணம்
ஒரு வருடம் அப்பாவின் பை பாஸ்
ஒரு வருடம் பிள்ளைகளுக்கு
வாழ்வியல் சந்தர்ப்பங்கள்
விடுமுறைகளை தள்ளிப்போட
உழைத்துக் கொண்டே இருக்கிறேன்
கண் கானா தூரத்தில் இருந்து
கிடைக்கும் சந்தர்ப்பங்களில்
அலைபேசிகளில்
வழியும் ஏக்கங்கள்
என் தாகத்தை சுலபமாக
தீர்க்கும் பாட்டில்கள்
உன் ஏக்கத்தை எப்படி தீர்த்து கொள்கிறாய்
என் பிரியமானவளே?
கண்கள் சந்தித்தபோதுகருவிழிகள் நின்றது வார்த்தைகள் சந்தித்தபோது மௌனம் நின்றது மனங்கள் சந்தித்தபோதுமதங்கள் நின்றது இதயங்கள் சந்தித்தபோது இன்னல் நின்றது திருமணம் சந்தித்தபோது இதயமும் நின்றது----------------------------------------தென்றலென தீண்டியவிழி சுழலின்ஆழிக் காற்றிலேசிறகில்லாமல்பறந்த போது தான் தெரிந்ததுநீஓர் புயலென